நேர்வழியில் மக்கள் மன்றத்தில் சந்தித்து வெல்ல முடியாத மதவாத பாஜக மோடி அரசு.. தனியரசு காட்டம்
சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜியுடன் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் உள்ள நிலையிலும் அவருக்காக ஆதரவு குரல் கொடுத்து கவனம் ஈர்த்திருக்கிறார் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு.
செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டடற்கு தனியரசு கண்டனம் தெரிவித்துள்ளதோடு அவர் குணமடைய வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியரசு விடுத்துள்ள பதிவு வருமாறு;
''தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான அமலாக்கத்துறை நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். அரசியல் எதிரிகளை நேர்வழியில் மக்கள் மன்றத்தில் சந்தித்து வெல்ல முடியாத மதவாத ஒன்றிய பாஜக மோடி அரசு, அதன் கீழுள்ள ED,IT,CBI அமைப்புகளை ஏவி முடக்கி ஒடுக்கும் போக்கை கண்டிக்கிறேன்.

உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் சர்வாதிகார போக்கில் அமைச்சரை நடத்துவது தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்துவது கூட்டாட்சி அதிகாரத்தை மீறிய செயல்.இது இந்திய ஜனநாயக மக்களாட்சி முறையமைவுக்கும் எதிரானது.
ஜனநாயக சக்திகள் அரசியலகட்சி மாட்சரியங்களுக்கு அப்பாற்பட்டு இதை கண்டிக்கவேண்டுகிறேன். அறவழி ஜனநாயக சட்ட நடைமுறைப்படி நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி குணமடைய வாழ்த்துக்கள்.''












Click it and Unblock the Notifications