ஈபின்னா தெரியும்.. 49பின்னா என்ன பாஸ்? விழுந்து விழுந்து தேடிய மக்கள்.. இப்ப இது டிரெண்டிங்!
சர்கார் படத்திற்கு பின் மக்கள் சட்டப்பிரிவு 49பி என்றால் என்ன என்று கூகுளில் அதிக அளவில் தேடி இருக்கிறார்கள்.
Recommended Video

சென்னை: சர்கார் படத்திற்கு பின் மக்கள் சட்டப்பிரிவு 49பி என்றால் என்ன என்று கூகுளில் அதிக அளவில் தேடி இருக்கிறார்கள்.
விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நிறைய அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் உள்ளது.
இந்த நிலையில் சர்கார் படத்திற்கு எதிராக தமிழகம் முழுக்க அதிமுகவினர் போராட்டம் நடத்த தொடங்கி இருக்கிறார்கள். இதனால் படம் மீண்டும் இந்தியா முழுக்க வைரலாகி உள்ளது.
[இத மட்டும் சொல்லிட்டு விஜய் ரோட்டுல நடந்து போகட்டும் பார்க்கலாம்... ஓ.எஸ்.மணியன் சவால்! ]

என்ன காட்சி
இந்த படத்தில் ஹீரோ சுந்தர் ராமசாமியின் ஓட்டை வேறு ஒரு நபர் கள்ள ஓட்டு போட்டுவிடுவார். அதற்கு எதிராகத்தான் கதை வேகம் பிடிக்கும். இந்த படத்தில் ஹீரோ மக்களிடம் தேர்தல் சட்ட பிரிவு 49பி பற்றி விளக்கம் அளிப்பார். அந்த காட்சி பெரிய வைரல் ஆகியுள்ளது.

என்ன சட்டம்
தேர்தல் சட்ட பிரிவு 49பி படி ஒருவர் நம்முடைய ஓட்டை கள்ள ஓட்டாக பதிவு செய்துவிட்டாலும், நமக்கு நம்முடைய ஓட்டை பதிவு செய்ய உரிமை அளிக்கும். அதாவது வாக்கு பதிவு மையத்திற்கு நாம் சென்று அதற்கு என்று இருக்கும் வாக்கு சீட்டு ஒன்றில் வாக்கை தனியாக பதிவு செய்யலாம். இதனால் கள்ள ஓட்டு காரணமாக நம்முடைய ஓட்டு பறிபோகாது.

பெரிய வைரல்
படத்தில் இந்த சட்டம் குறித்து வந்த வசனத்திற்கு பின் அந்த சட்டம் பெரிய வைரல் ஆகியுள்ளது. கூகுளில் மக்கள் இதைப்பற்றி விழுந்து விழுந்து தேடி இருக்கிறார்கள். அதன்படி கூகுள் டிரெண்டில் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 49P என்ற வார்த்தை அதிக அளவில் தேடப்பட்டு இருக்கிறது.
|
டிவிட்
இந்த நிலையில் சர்கார் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இதுகுறித்து டிவிட் செய்துள்ளது. கூகுளில் டிரெண்டில் 49P சர்கார் பட ரிலீசிற்கு பின் திடீர் என்று அதிகரித்து இருக்கிறது என்று டிவிட் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications