தமிழர்களைப் பெருமைப்பட வைத்த தந்தை பெரியார் வழியில்.. துணை முதல்வர் ஓபிஎஸ் போட்ட ட்விட்
சென்னை: தமிழர்களைப் பெருமைப்பட வைத்த தந்தை பெரியார் வழியில் சமநீதி சமத்துவம் தழைக்க பாடுபடுவோம் என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர் ஈ.வெ.இராமசாமி. இதனால் தந்தை பெரியார் என்று அனைவராலும் போற்றப்படுகிறார். திராவிட இயக்கத்தை தோற்றுவித்தவர். இன்றைக்கும் ஆளும் அதிமுகவும் சரி, எதிர்க்கட்சியான திமுகவும் சரி கடந்த கிட்டத்தட்ட 50 ஆண்டுளாக இவரது சமூக நீதி கொள்கையை பின்பற்றியே ஆட்சி செய்து வருகின்றன.
ஜரூராகும் சசிகலா விடுதலை நடவடிக்கைகள்... ரூ10 கோடி அபராதத்தையும் செலுத்த மனு
இந்நிலையில் தந்தை பெரியாரின் 142 வது பிறந்த தினம் நாளை கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளையொட்டி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்
"காரிருள் சூழ்ந்திருந்த சமுதாயவானில்
பேரொளியாய் வந்துதித்த அறிவுச்சுடர்
சாதிமத பேதங்களை எதிர்த்து பெண் அடிமை விலங்கொடித்து
அறியாமை இருள் நீக்கிய
பகுத்தறிவுப்பகலவன்
தமிழர்களைப்
பெருமைப்பட வைத்த
தந்தை பெரியார் வழியில்
சமநீதி சமத்துவம் தழைக்க பாடுபடுவோம் என இந்நாளில் உறுதி ஏற்போம்." என்று கூறியுள்ளார்.