50 கிமீ வேகத்தில் சூறாவளி.. அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் இங்கெல்லாம் வெளுக்க போகுது மழை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்கள், கேவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்கள், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நீலகிரி, கோவை, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

The Chennai Meteorological Department has forecast thunderstorms showers in many districts

இதேபோல் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லார் (கோவை), வால்பாறை (கோவை) தலா 9 செ.மீ, சின்கோனா (கோவை)8 செமீ, வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம் (கோவை) 7 செமீ, சித்தார் (கன்னியாகுமரி) 6 செமீ, தேவலா(நீலகிரி), சோலையார் (கோவை) தலா 5 செமீ, உதகமண்டலம் (நீலகிரி), குடவாசல் (திருவாரூர்), மேல் பவானி ( நீலகிரி), சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 4 செமீ, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), பெரியார் (தேனி), பெங்கலூர் (புதுக்கோட்டை), ஆர்எஸ் மங்களம் (ராமநாதபுரம்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), தேக்கடி(தேனி) தலா 3 செமீ மழை பெய்துள்ளது.

மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி வீசக்கூடும் என்பதால் அந்தமான், மன்னர் வளைகுடா, கடலோரா கேரளா,கர்நாடகா லட்சத்தவு மற்றும் மாலத்தீவ பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+