கண்காணிப்பு வளையத்திற்குள் அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா... திங்களன்று தொடங்கும் விசாரணை..!
சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது எழுந்துள்ள புகார்கள் தொடர்பாக திங்கள்கிழமை முதல் விசாரணை தொடங்குகிறது.
ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு சூரப்பா மீதான விசாரணையை நடத்த இருக்கிறது. மூன்று மாதங்களில் நீதிபதி கலையரசன் குழு விசாரணை அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்யும் எனத் தெரிகிறது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமனம் செய்யப்பட்டது முதலே தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார் அவர். கர்நாடகாவை சேர்ந்த அவர் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக பொறுப்பேற்றது முதல் அவரை சுற்றி சர்ச்சைகள் வட்டமடித்துக் கொண்டே இருக்கின்றன.
பகவத் கீதை விவகாரம் தொடங்கி அண்மையில் அண்ணா பல்கலைக்கழக உயர் சிறப்பு அந்தஸ்து வேண்டி தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது வரை அவரது நடவடிக்கைகள் விமர்சிக்கப்பட்டன. இந்நிலையில் சூரப்பா தனது மகளுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்ததாகவும், தற்காலிக ஊழியர்கள் நியமனத்திற்கு பல லட்ச ரூபாய் பணம் பெற்றதாகவும் அவர் மீது புகார்கள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து அதன் மீது விசாரணை நடத்த தமிழக அரசு திட்டமிட்டு வந்தது. இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவை விசாரணை நடத்த நியமித்திருப்பதோடு அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் கேட்டிருக்கிறது. இதையடுத்து வரும் திங்கள்கிழமை முதல் சூரப்பா மீதான புகார் குறித்து விசாரணை நடத்தப்பட இருக்கிறது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications