செங்கோட்டையனுக்கு மிக முக்கிய பதவி! கையில் கடிதத்துடன்.. ஆளுநர் மாளிகைக்கு போன விஜய்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில் விரைவில் விஜய் முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார். அதேநேரம் செங்கோட்டையனுக்கு மிக முக்கிய பதவி வழங்கப்பட இருக்கிறது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், 108 இடங்களை வெற்றி பெற்றிருக்கிறது. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்திருக்கிறது. அதேபோல, விசிக மற்றும் இடதுசாரிகளிடமும் விஜய் தரப்பில் ஆதரவு கேட்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் நாளை அல்லது நாளை மறுநாள் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுக்கொள்வார் என்று சொல்லப்படுகிறது. இதற்காக இன்று ஆளுநரை விஜய் சந்தித்திருக்கிறார். முதலில் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுக்கொள்வார். அதனை தொடர்ந்து அமைச்சரவையும் பதவியேற்கும். பின்னர் சட்டமன்றத்தில் விஜய் பெரும்பான்மையை நிரூபிப்பார்.
முன்னதாக யார் யாருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோருக்கு முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இதில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி வழங்கப்படும் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
இந்நிலையில் செங்கோட்டையனுக்கு தற்காலிக சபாநாயகர் பதவி வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இதற்கான கடிதத்தை ஆளுநரிடம் விஜய் வழங்க உள்ளதாகவும், தற்காலிக சபாநாயகருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் தற்காலிக சபாநாயகர், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட MLA-க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். அத்துடன் சட்டப்பேரவை முன்னவராகவும் செங்கோட்டையன் செயல்பட உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications