சென்னைவாசிகளே உஷார்.. மெட்ரோவில் போறீங்களா.. "இது ரொம்ப முக்கியம்".. மெட்ரோ நிர்வாகம் திடீர் வார்னிங்
மெட்ரோ ரயிலில் நூதன மோசடி நடத்தப்படுவது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் கொடுத்திருக்கிறது
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பயணச்சீட்டு பரிசோதகர் போல நடித்து ஏமாற்றி பயணிகளிடம் பணம் வசூலிக்க சிலர் கிளம்பியுள்ளனர். இது குறித்து மெட்ரோ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது. பண்டிகை நாட்களில் மெட்ரோவில் கூட்டம் நிரம்பி வழியும். மட்டுமல்லாது சென்னையில் நீடித்து வரும் போக்குவரத்து நெரிசலுடன் ஒப்பிடும்போது மெட்ரோ சேவையானது விமான நிலையம், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அவசரமாக செல்வதற்கு கிடைத்த ஒரு பொக்கிஷமாக இருந்து வருகிறது.

தற்போது இரண்டு வழித்தடங்களில் இயங்கி வரும் இந்த மெட்ரோ சேவையானது மேலும் சில வழித்தடங்களில் விரிவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மெட்ரோ ரயில் சேவை தொடர்பாக புகார் எழுந்து வருகிறது. அதாவது, டிக்கெட் பரிசோதகர்கள் என்கிற பெயரில் பயணிகளிடம் டிக்கெட் கேட்டு சிலர் பணம் வசூலித்து வந்துள்ளனர். இது தொடர்பாக விளக்கமளித்துள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம் 'டிக்கெட் பரிசோதகர்' என தாங்கள் யாரையும் நியமிக்கவில்லை என்று கூறியுள்ளது.
மேலும், "மெட்ரோ ரயிலுக்கு பயண அட்டைகள்/டோக்கன்கள்/க்யூ ஆர் குறியீடு போன்றவற்றின் மூலம் மட்டுமே டிக்கெட் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட்கள் அனைத்தும் ஆட்டோமெடிக் மெஷன் மூலம் சரி பார்க்கப்படுகிறது. தானியங்கி கட்டண வசூல் இயந்திரத்தின் மூலமாக நுழைவு/வெளியேறும் போது ஏதேனும் சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில் மெட்ரோ இரயில் நிலையங்களில் அமைந்துள்ள கட்டண அலுவலக அறைகளில் மட்டுமே அது சரி செய்து தரப்படும். மெட்ரோ இரயில் பயணிகளிடம் பயணச்சீட்டு பரிசோதனை செய்யப்படுவது இல்லை. இதற்காக எந்த அதிகாரிகளையும் மெட்ரோ நியமிக்கவில்லை.
ஆனால் சில தங்களை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு பணம் வசூல் செய்து வருவதாக புகார் வந்திருக்கிறது. இதுபோன்ற அநாகரிகமான, விஷமத்தனமான செயலில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்று செயலில் ஈடுப்படுவதாக சந்தேகப்படும் நபர்களை பயணிகள் கண்டறிந்தால் அவர்களும் அருகிலுள்ள காவல் நிலையம் மற்றும் மெட்ரோ இரயில் நிலைய கட்டுப்பாட்டாளரிடம் புகார் அளிக்கலாம். இதுபோன்று சந்தேகப்படும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் எச்சரித்துள்ளது.
மேற்கூறிய செயலைச் செய்த நபரால் ஏமாற்றம் அடையும் நபர்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு சென்னை ரயில் நிறுவனம் பொறுப்பேற்காது" என்று கூறியுள்ளது.
-
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
பெங்களூரில் முடங்கும் மெட்ரோ ரயில் சேவை.. ஏப்.,5 ம் தேதி பராமரிப்பு பணி அறிவிப்பு -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக!











Click it and Unblock the Notifications