இணக்கமாக வாழும் மக்கள் மத்தியில் பீதி.. காவல்துறையின் சேவகம் யாருக்கு? ஸ்டாலின் கேள்வி
சென்னை: இணக்கமாக வாழும் மக்கள் மத்தியில் இனம்புரியாத பீதி ஏற்பட்டுள்ளது. காவல்துறையின் அலட்சியத்தால் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் உருவாகியுள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோரின் வீடுகள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டதையும், அப்பாவி மக்கள் பலர் கடுமையான தாக்குதலுக்குள்ளானதையும் தடுத்து நிறுத்தாமல், காவல்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்த்தது கடும் கண்டனத்திற்குரியது. நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் சுயநல தீய சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டாமா?

காவல்துறை யாருக்கு சேவகம் செய்து கொண்டிருக்கிறது என ஸ்டாலின் வினவியுள்ளார். தற்போது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியிலும் இரு பிரிவினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டு அங்கும் அமைதி சீர்குலைந்துள்ளது.
இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியாமல் அம்மாவட்ட எஸ்.பி.க்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் காவல்துறை தனது மெத்தன போக்கை கைவிட்டு, சமூக நல்லிணக்கத்திற்குச் பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் சக்திகள் யாராக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்கிட வேண்டும்.
மக்கள் அனைவரும் சகோதரமனப்பான்மையுடன் சுமுகமான முறையில் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையையும் உருவாக்கிட வேண்டும். இதனை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியையும், தேர்தல் டி.ஜி.பி.யையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications