அய்யா தலைவர்களே.. பக்குவமடைய டிரை பண்ணுங்கய்யா.. மக்கள் உங்களை பார்த்துட்டிருக்காங்க!
தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் நாகரீகத்துடன் பேசுவது அவசியம்.
Recommended Video
சென்னை: தலைவர்கள் எல்லாம் வர வர ரொம்ப கோபமாகிறார்கள். உக்கிரமடைகிறார்கள், எரிச்சல் படுகிறார்கள். ஆவேசம் காட்டுகிறார்கள். தங்களை மக்கள் கவனிக்கிறார்களே என்று கூட அவர்கள் நினைப்பதில்லை.
அரசியல்வாதிகள், செய்தியாளர்கள்! இவர்கள் இருவருமே எப்போதுமே பங்காளிகள்... அதேசமயத்தில் பகையாளிகளும் கூட! நல்ல கேள்வி கேட்டால் தலைவர்கள் சந்தோஷமடைவார்கள்! எடக்கு மடக்கான கேள்வி கேட்டால் போதும் உடனே தலைவர்கள் கடுப்பாகி விடுகிறார்கள்!
சமீப ஆண்டுகளாக பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் கொடுப்பதற்குப் பதில் கோபம் காட்டுவதும், அடிக்கப் பாய்வதும், தேவையில்லாத வார்த்தைகளைப் பிரயோகிப்பதும் அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் தாக்கக் கூட முயற்சிக்கிறார்கள் தலைவர்கள்!

பிள்ளையார் சுழி போட்ட விஜயகாந்த்
இந்த அதிரடி பழக்கத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் நம்ம விஜயகாந்த்தான். தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்கோ, போய்யா, நீயாடா எனக்கு சம்பளம் கொடுக்கிற என்றெல்லாம் திட்டித் தீர்த்து, காரித் துப்பி, விமான நிலையத்தில் செய்தியாளர் ஒருவரை அடிக்கப் பாய்ந்து, பிரஸ் மீட்டில் வெளிநடப்பு செய்து.. அவர் செய்யாத சேட்டை இல்லை.

பாரம்பரியத்தை தொடர்ந்த பிரேமலதா
அடுத்து அவரது மனைவி பிரேமலதாவும் சில வாரங்களுக்கு முன்பு தனது கணவர் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்தார். செய்தியாளர்கள், அதிமுக கூட்டணி, திமுகவுடன் ரகசியப் பேச்சு, பாஜகவுடன் பேச்சு என சரமாரியாக தேமுதிக செயல்பட்ட விதம் குறித்துக் கேட்டபோது கோபமடைந்தார். ஒருமையில் பேச ஆரம்பித்தார். கோபம் கக்கினார். ருத்ரதாண்டவமே ஆடி விட்டார்.

உக்கிரம்
ஆனால் இதெல்லாத்தையும் விட நேற்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு படி மேலே போய் அனைவரையும் அதிர வைத்து விட்டார். தன்னை தொடர்ந்து கேள்வி கேட்ட செய்தியாளரைப் பார்த்து கோபமடைந்து "நீ யார், என்ன சாதி என்று கேட்ட அவர் என்ன தெரு என்றும் கூட கேட்பேன்" என்று கூறியபோது செய்தியாளர்கள் அனைவருமே அதிர்ந்தனர்.

வரலாறு காணாத போக்கு
அரசியல் தலைவர்களின் போக்கு, அவர்களது செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை வைத்துத்தான் செய்தியாளர்கள் அவர்களிடம் பேசுகிறார்கள், விளக்கம் கேட்கிறார்கள், கேள்வி கேட்கிறார்கள். இதெல்லாம் கூட அவர்களுக்காக அல்ல.. மக்களிடம் கொண்டு போய் சேர்க்கத்தான். இந்த அடிப்படை கூட புரியாமல் தலைவர்கள் செயல்படுவதும், கோபம் காட்டுவதும், சாதி பெயரைக் கேட்பதும், தெருப் பெயரைக் கூட கேட்பேன் என்று கூறுவதும் அதிர்ச்சிகரமாக இருக்கிறது, அயர்ச்சியாக வருகிறது.

பக்குவம் தேவை
தனிப்பட்ட வாழ்க்கை, கொள்கை குறித்து யாரும் கவலைப்படப் போவதும் இல்லை கண்டு கொள்ளப் போவதும் இல்லை. ஆனால் பொது வாழ்க்கையில் அவர்கள் சந்தித்து வரும் சம்பவங்கள் குறித்த கேள்விகளையும், விளக்கத்தையும்தான் செய்தியாளர்கள் கேட்பது வழக்கம். இதை எதிர் கொள்வதும், எதிர்கொள்ளாமல் பதிலளிக்க விரும்பவில்லை என்று கடந்து செல்வதும் தலைவர்களின் உரிமை. ஆனால் அதைத் தவிர்த்து தனிப்பட்ட முறையில் வார்த்தைப் பிரயோகம் செய்வதும், சாதியெல்லாம் கேட்பதும் நல்லாவா இருக்கு?

நல்லாவே இல்லையே
சாதி மறுப்பு இயக்கம் கண்ட மண் தமிழகம். இங்கு சாதியை, மதத்தை வைத்து பிரித்துப் பார்க்கும் யாரையும் மக்கள் ஏற்பதில்லை. அப்படிப்பட்ட மாநிலத்தில் எல்லோருக்கும் பொதுவான பத்திரிகையாளர்களைப் பார்த்து சாதி கேட்பதும், அடிக்க வருவதும் நல்லாவே இல்லையே தலைவர்களே.. !
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications