அதிர்ச்சி அளித்த ரஜினி பேட்டி.. குழப்பத்தில் ரசிகர்கள்.. அரசியலுக்கு வருவீங்களா மாட்டீங்களா பாஸ்!
நடிகர் ரஜினியின் அரசியல் வருகை குறித்த முன்னுக்குப்பின்னான அறிவிப்புகள் எல்லாமும் அவரது ரசிகர்களை பெரிய குழப்பத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
Recommended Video
சென்னை: நடிகர் ரஜினியின் அரசியல் வருகை குறித்த முன்னுக்குப்பின்னான அறிவிப்புகள் எல்லாமும் அவரது ரசிகர்களை பெரிய குழப்பத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த வருடம் டிசம்பர் இறுதி நாள், அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். கட்சியை தொடங்கி தமிழக சட்டமன்ற தேர்தலில் நிற்க போகிறேன் என்று கூறினார்.
ஆனால் அதற்கு பின் எந்த அறிவிப்பும் வெளியிடாமல் சைலன்ட் மோடிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் தொடர்ந்து நிறைய குழப்பமான அறிவிப்புகளை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டு வருகிறார்.
மக்கள் மன்றத்தை வைத்து அரசியலில் சாதிக்க முடியாது.. ரஜினிகாந்த் திடீர் எச்சரிக்கை
டிசம்பரில் அறிவிப்பு
சென்ற டிசம்பரில் அறிவிப்பு வெளியிட்ட ரஜினி ஒருவருடம் கழித்து இந்த டிசம்பரில்தான் கட்சி குறித்த அடுத்த அப்டேட்டை வெளியிடுவார் என்று கூறுகிறார்கள். டிசம்பர் 12ம் தேதி வரப்போகும் ரஜினியின் பிறந்த நாள் அன்று இந்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறுகிறார்கள். பெரும்பாலும் கட்சியின் பெயர் கொடியை அவர் வெளியிட வாய்ப்புள்ளது.
நடக்காது என்கிறார்கள்
ஆனால் அவருக்கு நெருக்கமானவர்கள், ரஜினி அப்படி அறிவிப்பு வெளியிடும் திட்டம் எதிலும் இல்லை என்று கூறியுள்ளனர். அதன் காரணமாகத்தான் மற்றவர்கள் போல அரசியல் செய்ய நான் ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என்று ரஜினி பேசியதாக தெரிவிக்கிறார்கள். இந்த வருடம் பெரிய அறிவிப்பு எதுவும் ரஜினியிடம் இருந்து இருக்காது என்றும் சொல்கிறார்கள்.
பாவம்
அதுமட்டுமில்லாமல்., ரசிகர் மன்றத்தில் பல வருடமாக இருந்தவர்கள் எல்லோருக்கும் கண்டிப்பாக பதவி கொடுக்க முடியாது. கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ரஜினி குண்டை தூக்கி போட்டுள்ளார். இதற்கு ஏற்றபடி ஏற்கனவே சில முக்கிய உறுப்பினர்களை அவர் மன்றத்தில் இருந்து நீக்கியுள்ளார். அந்த இடத்திற்க்கு புதிய நபர்களை கொண்டு வந்துள்ளார்.
பெரிய அதிர்ச்சி
இது சில முக்கிய உறுப்பினர்களுக்கு மன்றத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 40 வருடமாக உழைத்தவர்களுக்கு பதவி கிடையாது என்று சொல்வதா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். ரஜினியின் கட்சியே அவரது உண்மையான அடிமட்ட ரசிகர்களை நம்பித்தான் இருக்கிறது. கடைசியில் அவர்களே அதிர்ச்சிக்கு உள்ளாகும் வகையில் வெளியாகும் அறிவிப்பு எல்லாம் பெரிய பரபரப்பை உருவாக்கி உள்ளது.
ரஜினி வருவாரா மாட்டாரா?
இது எல்லாம் சேர்த்துதான் ரஜினி அரசியலுக்கு உண்மையில் வருவாரா இல்லையா என்று கேள்வியை எழுப்பி இருக்கிறது. அரசியல் அறிவிப்பு இல்லாத போது வருடத்திற்கு ஒரு படம் நடித்துக் கொடுத்தவர், இப்போதெல்லாம் மூன்று படங்களை ஒரேயடியாக நடித்து கொடுத்து வருகிறார். இப்படி தொடர்ந்து மாற்றி மாற்றி முடிவு எடுப்பதுதான் இவரின் அரசியல் வருகையை கேள்வி கேட்க வைக்கிறது.