வேலையை தொடங்கிய ஆதித்யா எல்1.. பேராபத்துகளை இனி ஈஸியாக கணிக்கலாம்! இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
சென்னை: சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட 'ஆதித்யா எல்-1' விண்கலத்தில் உள்ள ஆய்வு கருவிகள் தனது அளவீடுகளை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே 15 கோடி கி.மீ தொலைவு இருக்கிறது. சூரியனிலிருந்து வெளிவரும் ஒளியானது பூமியை வந்தடைய 7-8 நிமிடங்கள் வரை ஆகும். இந்த சூரிய ஒளியானது தாவரங்களின் வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கிறது. இது தவிர, சூரியனிலிருந்து அவ்வப்போது காந்த புயல்களும் வெளி வருகிறது. இந்த காந்த புயல் பூமியில் இருக்கும் அனைத்து மின்னணு சாதனங்களையும் செயலிழக்க வைத்துவிடும் திறன் கொண்டதாகும்.

இன்றைய தேதியில் நூற்றுக்கணக்கான அணு உலைகளை பாதுகாக்க மின்னணு சாதனங்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில் காந்த புயல் காரணமாக இது பாதிக்கப்பட்டால் பேரழிவு ஏற்படும். அதேபோல இந்த புயலிலிருந்து ஒரு செயற்கைக்கோள் கூட தப்பிக்காது. எனவே காந்த புயல்களை முன்கூட்டியே கணிக்கவும், சூரியனின் பல்வேறு அடுக்குகள், சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்களை ஆய்வு செய்யவும் 'ஆதித்யா L1' அனுப்பப்பட்டிருக்கிறது.
சூரியனை ஆய்வு செய்ய இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட முதல் விண்கலம் இதுதான் என்பதால் இதன் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்திருந்தது. பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' எனும் இடத்தில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தொலைவில் பூமியின் ஈர்ப்பு விசை சில லட்சம் கி.மீ வரை இருக்கும். இதனை 5 புள்ளிகளாக பிரித்து அதற்கு 'லெக்ராஞ்சியன் பாயிண்ட்' என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.
இந்த புள்ளியில்தான் ஆதித்யா எல்1 விண்கலம் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த விண்கலம் கடந்த மாதம் 2ம் தேதி முதல் தனது செயல்பாடுகளை தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் தற்போது இந்த விண்கலத்தில் உள்ள ஆய்வு கருவில் தனது அளவீடுகளை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்திருக்கிறது. அதாவது சூரியனிலிருந்து வரும் சூரிய காற்று அயனிகள், புரோட்டான்கள், ஆல்பா துகள்களை அளவிட தொடங்கியுள்ளது. இதில் சூரிய காற்று அயனிகள் பூமியல் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஆதித்யா எல்1 ஆய்வுகள் மூலம் தெரிந்துகொள்ள முடியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
-
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!












Click it and Unblock the Notifications