Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆகாயத்தில் இருந்தபடியே.. அணு அட்டாக் செய்யலாம்! வெளியே வந்தது டூம்ஸ்டே விமானம்.. டிரம்ப் ஷாக் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்க அதிபருக்கான 'டூம்ஸ்டே விமானம்' (Doomsday Plane) திடீரென வெளியே தோன்றியது மக்களிடையே கேள்விகளை எழுப்பி உள்ளது.

அமெரிக்க அதிபர் ஆபத்து காலங்களில் பாதுகாப்பாக செல்ல பயன்படுத்தும் இந்த விமானம் மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களைக் கேள்விகள் கேட்கத் தூண்டி, ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவணப்படங்கள் அல்லது பேரழிவுத் திரைப்படங்களில் மட்டுமே காணக்கூடிய இந்த விமானம், சாதாரணமாக வானில் பறப்பதைக் காண்பது பெரும்பாலானோருக்கு ஆச்சரியமாகவே இருந்தது.

Venezuela USA Donald Trump

என்ன விமானம் இது?

இது ஒரு சாதாரண விமானம் அல்ல. அமெரிக்க அரசாங்கம் மிக மோசமான சூழ்நிலைகளிலும் தொடர்ந்து செயல்படுவதை உறுதிசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு பறக்கும் கண்ட்ரோல் ரூம் மையமாகும். இதன் உள்ளே பாதுகாப்பான தகவல் தொடர்பு அமைப்புகள், பாதுகாப்புடன் கூடிய அறைகள் பகுதிகள், மற்றும் வானிலிருந்தே இராணுவத்திற்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கும் திறன்கள் உள்ளன. வானத்தில் இருந்தே அணு ஆயுத அட்டாக் நடத்தவும் இதன் மூலம் உத்தரவிட முடியும். போர் சமயங்களில் அதிபரின் உயிரை காக்கவும்.. அதே நேரம் எதிரி நாடுகள் மீதும் தாக்குதல் நடத்துவதற்கு வசதியாக இந்த விமானம் பயன்படுத்தப்படும் .

திகிலூட்டும் அம்சம்

இந்த விமானத்தின் உண்மையான திகிலூட்டும் அம்சம் அது எதைக் குறிக்கிறது என்பதுதான். இது நீண்ட நேரம் வானில் பறக்கக்கூடியதுடன், நடுவானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதியையும் கொண்டது. அணு குண்டு வெடிப்புகளால் ஏற்படும் மின்காந்தத் துடிப்புகளிலிருந்து (electromagnetic pulses) அதன் அமைப்புகளைப் பாதுகாக்க வல்லது. சுருக்கமாகச் சொன்னால், தரைப்பகுதி இனி பாதுகாப்பாக இருக்காது என்ற அவசர கால சூழ்நிலைகளுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் எப்போது, ஏன் பயன்படுத்தப்படுகிறது என்பதை அதிகாரிகள் அரிதாகவே விளக்குகிறார்கள். சில சமயங்களில் வழக்கமான பயிற்சிக்கு இது பயன்படுத்தப்படுகிறது. வேறு சில நேரங்களில், சர்வதேச அளவில் பதட்டங்கள் அதிகரிக்கும்போது இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பறக்கவிடப்படுகிறது. டூம்ஸ்டே விமானம் வானில் பறக்கும் ஒவ்வொரு முறையும், உலக நாடுகள் அமைதி எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

போர் மூள்கிறதா?

ஏற்கனவே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் தனது சர்ச்சைக்குரிய திட்டத்தை மீண்டும் முன்மொழிந்துள்ளார். ஆரம்பத்தில் வெறும் அரசியல் பேச்சு என புறக்கணிக்கப்பட்ட இது, தற்போது ஐரோப்பியத் தலைவர்களால் தீவிரமான அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. ஐரோப்பா - அமெரிக்கா இடையிலான உறவுகளில் பெரும் நெருக்கடியை இது ஏற்படுத்தலாம் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.

கிரீன்லாந்து டென்மார்க் அரசின் கீழ் உள்ள ஒரு சுயாட்சிப் பிரதேசம். வேறு நாட்டின் ஆதிக்கம் வேண்டாம் என்பதை அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் மக்கள் தெளிவாகத் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா இந்த தீவை தன்னுடன் இணைக்க முயன்றால், விருப்பமில்லாத கிரீன்லாந்து மக்களை இராணுவ பலத்தால் கட்டுப்படுத்த நேரிடும். இது நீண்டகால அடிமை ஆட்சியையும், சர்வாதிகாரத்தை சூழலையும் உருவாக்கும்.

அத்துடன், அமெரிக்கா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே பெரிய வர்த்தகப் போரையும் தொடங்கலாம். ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கப் பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்ப நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்து பதிலடி கொடுக்கலாம். இது அமெரிக்க வணிக நலன்களையும் முதலீட்டாளர்களையும் பாதிக்கும்.

அமெரிக்காவிற்குள், இந்த நடவடிக்கை கடுமையான அரசியல் எதிர்ப்பை ஏற்படுத்தும். இத்தகைய செயலின் செலவு, அபாயங்கள், அவசியத்தை மக்கள் கேள்வி எழுப்பலாம். இது அமெரிக்காவில் நடக்க உள்ள மிட் டேர்ம் தேர்தல்களையும் பாதிக்க வாய்ப்புள்ளது. ராணுவ மோதல், பொருளாதார சேதம், உள்நாட்டு பாதுகாப்பு தன்மை என பலவற்றில் பிரச்சனைகளையை ஏற்படுத்தும்.

நேட்டோ உடைந்தால்.. அது சீனா, ரஷ்யாவிற்கு சாதகமாக மாறும். கிரீன்லாந்தை கைப்பற்றி அமெரிக்கா தற்காலிகமாக வென்றாலும்.. நீண்ட கால கண்ணோட்டத்தில் அமெரிக்காவிற்கு அது பெரிய பின்னடைவாக அமரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+