மக்கள் தொகை கணக்கெடுப்பில் திடீர் ட்விஸ்ட்.. மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்
டெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பு வழக்கம் போல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதல் கட்டத்தில் வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டு வசதி குறித்த கணக்கெடுப்பு நடைபெறும். இரண்டாம் கட்டத்தில் தான் சாதி வாரியான கணக்கெடுப்பு உள்ளிட்ட மக்கள் தொகை கணக்கீடு நடைபெறும். இந்த இரண்டாம் கட்டப்பணிகள் அடுத்த ஆண்டு (2027) பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். 2011-க்குப் பிறகு 2021-ல் நடக்க வேண்டிய கணக்கெடுப்பு கோவிட் காரணமாகத் தள்ளிப்போய், இப்போது 2025-2026 காலகட்டத்தில் நடத்துவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்திய வரலாற்றில், 2025-26 கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் நடைபெற இருக்கிறது. மக்கள் தங்களைப் பற்றிய தகவல்களை மொபைல் ஆப் மூலம் தாங்களாகவே பதிவு செய்யும் வசதியும் இருக்கும்.

இது தரவுகளை விரைவாகச் சேகரிக்கவும், துல்லியமாகப் பகுப்பாய்வு செய்யவும் உதவும். மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் நிதி, மக்கள் தொகையின் அடிப்படையிலேயே ஒதுக்கப்படுகிறது. எத்தனை பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் தேவை என்பதைத் தீர்மானிக்க இது அவசியம் ஆகும்.
மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், "2027-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த முழுமையான தகவல்கள் ஏற்கனவே கடந்த மாதம் 12-ந் தேதி வெளியிடப்பட்டது. இருப்பினும், சாதி வாரியான கணக்கெடுப்பு குறித்து சிலர் திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயன்று வருகின்றனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு வழக்கம் போல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதல் கட்டத்தில் வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டு வசதி குறித்த கணக்கெடுப்பு நடைபெறும். இரண்டாம் கட்டத்தில் தான் சாதி வாரியான கணக்கெடுப்பு உள்ளிட்ட மக்கள் தொகை கணக்கீடு நடைபெறும்.இந்த இரண்டாம் கட்டப்பணிகள் அடுத்த ஆண்டு (2027) பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் தொடங்கும்.
அதே சமயம், ஜம்மு காஷ்மீர், இமாசலபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் பனிப்பொழிவு அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும், முன்கூட்டியே அதாவது வருகிற செப்டம்பர் மாதமே இந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.முதல் கட்ட கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் 1-ந் தேதி தொடங்க உள்ளது. இதில் கேட்கப்பட வேண்டிய 33 கேள்விகள் குறித்த அறிவிக்கையை மத்திய அரசு கடந்த ஜனவரி 22-ந் தேதி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications