நள்ளிரவில் கோயம்பேடு நோக்கி மின்னல் வேகத்தில் வந்த கார்.. அந்தரத்தில் பறந்த இளைஞர்.. கொதித்த மக்கள்
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு நோக்கி மின்னல் வேகத்தில் சென்ற கார் ஒன்று மோதியதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை மடக்கி பிடித்து உறவினர்கள் அடித்து நொறுக்கினார்கள்.
சென்னை கீழ்ப்பாக்கம், புல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி ரூபாவாணி (48). இவர்களது மகன் ஆகாஷ் கேட்டரிங் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 21ம் தேதி இரவு கீழ்ப்பாக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தியேடடர் அருகில் சாலையை கடந்து செல்ல முயன்றிருக்கிறார்.

அப்போது அந்த வழியாக கோயம்பேடு நோக்கி மின்னல் வேகத்தில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த கார் கண் இமைக்கும் நேரத்தில் ஆகாஷ் மீது மோதியது. இதில் ஆகாஷ் நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பை தாண்டி எதிர்புற சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனிடையே விபத்தை ஏற்படுத்திய கார், நிற்காமல் அதிவேகமாக சென்றது. இதனை கண்ட ஆகாஷின் நண்பர்கள் மற்றும் அவரது உறவினர்கள் அந்த காரை இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்றார்கள். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசாரும் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை விரட்டி சென்றார்கள்.
சுமார் 2 கிலோ மீட்டர் வரை துரத்திச்சென்று அரும்பாக்கம் அருகே காரை மடக்கி பிடித்தார்கள். அங்கிருந்த வாகன ஓட்டிகள் மற்றும் ஆகாஷின் உறவினர்கள் விபத்தை ஏற்படுத்திய காரை அடித்து நொறுக்கினர். இதில் காரின் முன்புறம் மற்றும் பக்க வாட்டு கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது.

இதனிடையே இந்த விபத்து குறித்து தகவல் அறிந்துவந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான ஆகாஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். அந்த காரை ஓட்டி வந்த ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த அசீம் (25)என்பவரை கைது செய்தனர். அவர், தோல் வியாபாரம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஒருவரிடம் டிரைவராக வேலை செய்து வருபவர் என்பது தெரியவந்தது.
நேற்று முன்தினம் இரவு தொழில் சம்பந்தமாக தனது உரிமையாளர் உள்பட 4 பேருடன் காரில் மூலக்கடை, எண்ணூர் மற்றும் புரசைவாக்கம் ஆகிய பகுதிகளுக்கு சென்றிருக்கிறார். பின்னர் தாசபிரகாஷ் வழியாக வீடு திரும்பியபோது விபத்து ஏற்படுத்தியதும் தெரிந்தது. அசிம் மீது அதிவேகமாக வாகனத்தை இயக்குதல் மற்றும் அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
எல்லா SP-க்களும் சென்னை நோக்கி.. தலைநகரில் 8 பேருக்கு புதுபொறுப்பு! வெயிட்டிங் லிஸ்ட்க்கு குட்பை -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications