Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உதயநிதி ஏதோ பேசுகிறார்.. ஓபிஎஸ் எப்படி மாநில ஆளுநராக முடியும்? தேனி எம்பி ஓ.பி. ரவீந்திரநாத் கேள்வி

ஓபிஎஸ் எப்படி மாநில ஆளுநராக முடியும்?- தேனி எம்பி ஓ.பி. ரவீந்திரநாத் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓ. பன்னீர் செல்வம் எப்படி ஒரு மாநிலத்தின் ஆளுநராக முடியும் என தேனி எம்பியும் ஓபிஎஸ் மகனுமான ஓ.பி. ரவீந்திரநாத் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரு தினங்களாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

அப்போது அவர் கூறுகையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் அன்பை பெற்றவர். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நான் முதல்முறையாக உங்களை சந்திக்க வந்துள்ளேன். அதிமுக வேட்பாளர் ஓட்டு கேட்க வந்தால் அவரை விரட்டியடிக்கிறார்கள்.

மீசை இருக்கு

மீசை இருக்கு

இதை டிவிக்களில் பார்க்க முடிகிறது. அந்த விரக்தியில்தான் இங்கு வந்த போது ஆம்பளையா என பேசி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி, ஆம்பளையாக இருந்தால் மீசை இருக்க வேண்டும். வேட்டி கட்ட வேண்டும் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். அவருக்கு மீசை இருக்குனு தெரியும்.

பெண்ணுரிமைக்கு போராடிய மண்

பெண்ணுரிமைக்கு போராடிய மண்

பெண்ணின் சம உரிமைக்கு போராடிய பெரியாரின் மண்ணில் இருந்து இதை பேசியிருக்கிறார். நீங்கள் என்ன மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வரா, நீங்கள் எப்படி முதல்வர் ஆனீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அதிமுக ஆட்சியில் அடிமையாக இருந்தவர்கள் இப்பவும் பாஜகவுக்கு அடிமையாக இருக்கிறார்கள்.

எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும்

எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும்

எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் அவர்களுடைய பிரச்சினைக்கு பிரதமர் மோடிகிட்ட போனாங்க, என்றைக்காவது மக்கள் பிரச்சினைக்கு போயிருக்கிறார்களா? ஒரு முறை தவறுதலாக எடப்பாடி என் வண்டியில் ஏற போயிட்டாரு! அப்பவே கமலாலயத்திற்கு மட்டும் போயிடாதீங்கன்னு சொன்னேன். இப்போ இரண்டு பேருமே போட்டி போட்டுக் கொண்டு கமலாலயம் போகிறார்கள்.

 ஈரோட்டில் 1000 கோடி ரூபாய்

ஈரோட்டில் 1000 கோடி ரூபாய்

ஈரோட்டில் 1000 கோடி ரூபாய் அளவில் பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள்தான் இருக்கின்றன. உங்கள் வாக்குகளை காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்திற்கு அளியுங்கள். பாஜக என்றால் கவர்னர் டிரெயினிங் சென்டர் என்ற பொருள். தமிழகத்திலிருந்து பாஜக தலைவர்களுக்கு பயிற்சி கொடுத்து ஆளுநராக்கிவிடுகிறார்கள். தமிழிசை, இல கணேசன், சிபி ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆளுநர்களாகிவிட்டனர். அந்த வகையில் ஓபிஎஸ்ஸும் இந்தியாவில் ஏதாவது ஒரு மாநிலத்திற்கு ஆளுநராவார். அது போல் தமிழக பாஜக தலைவராக பழனிசாமி ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என உதயநிதி கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

ஓபிஎஸ் மகன் பதிலடி

ஓபிஎஸ் மகன் பதிலடி

இதற்கு பதிலடியாக ஓபிஎஸ் மகனும் தேனி எம்பியுமான ஓபி ரவீந்திரநாத் கூறுகையில், ஓபிஎஸ் எப்படி ஒரு மாநில ஆளுநராவார். ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓபிஎஸ் எப்படி மாநில ஆளுநராக முடியும். தேர்தல் நேரத்தில் எதையாவது பேச வேண்டும் என உதயநிதி பேசியுள்ளார் என ஓபி ரவீந்திரநாத் பதிலடி கொடுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+