உதயநிதி ஏதோ பேசுகிறார்.. ஓபிஎஸ் எப்படி மாநில ஆளுநராக முடியும்? தேனி எம்பி ஓ.பி. ரவீந்திரநாத் கேள்வி
ஓபிஎஸ் எப்படி மாநில ஆளுநராக முடியும்?- தேனி எம்பி ஓ.பி. ரவீந்திரநாத் கேள்வி
சென்னை: ஓ. பன்னீர் செல்வம் எப்படி ஒரு மாநிலத்தின் ஆளுநராக முடியும் என தேனி எம்பியும் ஓபிஎஸ் மகனுமான ஓ.பி. ரவீந்திரநாத் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரு தினங்களாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
அப்போது அவர் கூறுகையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் அன்பை பெற்றவர். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நான் முதல்முறையாக உங்களை சந்திக்க வந்துள்ளேன். அதிமுக வேட்பாளர் ஓட்டு கேட்க வந்தால் அவரை விரட்டியடிக்கிறார்கள்.

மீசை இருக்கு
இதை டிவிக்களில் பார்க்க முடிகிறது. அந்த விரக்தியில்தான் இங்கு வந்த போது ஆம்பளையா என பேசி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி, ஆம்பளையாக இருந்தால் மீசை இருக்க வேண்டும். வேட்டி கட்ட வேண்டும் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். அவருக்கு மீசை இருக்குனு தெரியும்.

பெண்ணுரிமைக்கு போராடிய மண்
பெண்ணின் சம உரிமைக்கு போராடிய பெரியாரின் மண்ணில் இருந்து இதை பேசியிருக்கிறார். நீங்கள் என்ன மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வரா, நீங்கள் எப்படி முதல்வர் ஆனீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அதிமுக ஆட்சியில் அடிமையாக இருந்தவர்கள் இப்பவும் பாஜகவுக்கு அடிமையாக இருக்கிறார்கள்.

எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும்
எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் அவர்களுடைய பிரச்சினைக்கு பிரதமர் மோடிகிட்ட போனாங்க, என்றைக்காவது மக்கள் பிரச்சினைக்கு போயிருக்கிறார்களா? ஒரு முறை தவறுதலாக எடப்பாடி என் வண்டியில் ஏற போயிட்டாரு! அப்பவே கமலாலயத்திற்கு மட்டும் போயிடாதீங்கன்னு சொன்னேன். இப்போ இரண்டு பேருமே போட்டி போட்டுக் கொண்டு கமலாலயம் போகிறார்கள்.

ஈரோட்டில் 1000 கோடி ரூபாய்
ஈரோட்டில் 1000 கோடி ரூபாய் அளவில் பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள்தான் இருக்கின்றன. உங்கள் வாக்குகளை காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்திற்கு அளியுங்கள். பாஜக என்றால் கவர்னர் டிரெயினிங் சென்டர் என்ற பொருள். தமிழகத்திலிருந்து பாஜக தலைவர்களுக்கு பயிற்சி கொடுத்து ஆளுநராக்கிவிடுகிறார்கள். தமிழிசை, இல கணேசன், சிபி ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆளுநர்களாகிவிட்டனர். அந்த வகையில் ஓபிஎஸ்ஸும் இந்தியாவில் ஏதாவது ஒரு மாநிலத்திற்கு ஆளுநராவார். அது போல் தமிழக பாஜக தலைவராக பழனிசாமி ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என உதயநிதி கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

ஓபிஎஸ் மகன் பதிலடி
இதற்கு பதிலடியாக ஓபிஎஸ் மகனும் தேனி எம்பியுமான ஓபி ரவீந்திரநாத் கூறுகையில், ஓபிஎஸ் எப்படி ஒரு மாநில ஆளுநராவார். ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓபிஎஸ் எப்படி மாநில ஆளுநராக முடியும். தேர்தல் நேரத்தில் எதையாவது பேச வேண்டும் என உதயநிதி பேசியுள்ளார் என ஓபி ரவீந்திரநாத் பதிலடி கொடுத்துள்ளார்.
-
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள்.. ஒன்றில் மட்டுமே தனி சின்னம்! தொகுதி பங்கீடு கையெழுத்து -
சபரீசன் கையில் விரைவில் திமுக.. அப்படியே ஆந்திரா ஸ்டைல்.. அணுகுண்டை வீசிய அஇஅதிமுக உதயகுமார் -
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
டிடிவி தினகரன் போட்டியிடும் தொகுதி இதுவா? எம்ஜிஆர் - ஜெயலலிதா வென்ற தொகுதியாச்சே.. ரூட் கிளியர் -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
NDA கூட்ட பேனரில் எடப்பாடி பழனிசாமி படம் புறக்கணிப்பு.. அதிர்ச்சியில் அதிமுகவினர்! என்னங்க நடக்குது? -
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
முக்கிய அமைச்சராச்சே.. இவருக்கே இவ்வளவு டஃப்பா.. சிட்டிங் மினிஸ்டருக்கு சிக்கல்.. ஸ்டாலின் பிளானிங் -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி!












Click it and Unblock the Notifications