சூடோமோனாஸால் செயலிழந்த உறுப்புகள்! வென்டிலேட்டருக்கு மறுத்த ராமநாதபுரம் பெற்றோர்! டீன் விளக்கம்
சென்னை: ராமநாதபுரத்தை சேர்ந்த கை அகற்றப்பட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது ஏன் என்பது குறித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் தேரணி ராஜன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒன்றரை குழந்தைக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில்டிரிப்ஸ் ஏற்றியபோது அதன் கை நிறம் மாறி அழுகியது. இதனால் குழந்தையின் உயிருக்கே ஆபத்து என கூறிய மருத்துவர்கள் உடனே அந்த குழந்தையின் வலது கையை அறுவை சிகிச்சை அகற்றினர்.

இந்த சம்பவத்திற்கு மருத்துவமனையின் அலட்சியப்போக்கே காரணம் என குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டினர். இந்த நிலையில் குழந்தையின் கை அகற்றப்பட்டது ஏன் என்பது குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை விளக்கம் அளித்தது. அதில் pesudomonas என்ற கிருமியால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்த நாளத்தை பாதித்ததால் வலது கையில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது.
குழந்தைக்கு இரத்தநாள அடைப்பு மருந்தினாலோ, மற்ற சிகிச்சை முறைகளாலோ ஏற்படவில்லை. வென்ஷன் (vention) ஊசியை தமனியில் போடவில்லை என்பது பெற்றோர் மருத்துவர்களின் வாக்குமூலத்தில் உறுதியானது. குழந்தை அனுமதிக்கப்பட்ட உடனேயே காலதாமதமின்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இரத்த ஓட்டம் பாதித்ததால் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வலது கையை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. மருந்து கசிவினால் இரத்த ஓட்ட பாதிப்பு ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது. குழந்தையின் உயிரை காக்கவே கை அகற்றப்பட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. அங்கு 35 நாட்கள் சிகிச்சை அளித்த நிலையில் கடந்த சில வாரங்களாக குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல்இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.
இதுகுறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் தேரணி ராஜன் கூறியிருப்பதாவது: குழந்தை குறைபிரசவத்தில் பிறந்ததால் ஏற்பட்ட பக்கவாதத்தினால் தலையில் ரத்தம் உறைந்தது. குழந்தைக்கு முழுமையான வளர்ச்சிகள் இல்லை, குழந்தையின் ரத்த நாளங்களில் அழற்சி ஏற்படட்தால் ரத்த ஓட்டம் தடைபட்டது. குழந்தைக்கு சூடோமோனாஸ் பாக்டீரியா தொற்று ஏற்பட்டதால் கையை அகற்றும் நிலை ஏற்பட்டது. மேலும் அந்த பாக்டீரியா உடல் முழுவதும் பரவி அடுத்தடுத்த உறுப்புகள் செயலிழந்தன. மூளையில் ஸ்டென்ட் கருவி பொருத்த பெற்றோர் ஒப்புக் கொள்ளவில்லை.
அது போல் இன்குபேஷனில் வைக்கவும் செயற்கை சுவாசம் அளிக்கவும் கூட அவர்கள் மறுத்து கையெழுத்து போட்டு கொடுத்துள்ளனர். குழந்தை உயிர் பிழைக்கும் என்றால் மேல் சிகிச்சையை தொடரலாம் என்றனர். குழந்தைக்கு உயர் தர சிகிச்சை அளித்தும் சூடோமோனால் தொற்றை அகற்ற முடியவில்லை.தினமும் மூத்த குழந்தைகள் நல மருத்துவர்கள் குழந்தையை ஆய்வு செய்து அதன் அறிக்கையை எனக்கு அனுப்புவார்கள். நானும் இரு தினங்களுக்கு முன்பு குழந்தையை பார்த்துவிட்டு அவருடைய தாயிடம் ஒன்றரை மணி நேரம் பேசினேன். அப்போது அவரிடம் தெளிவாக சொல்லிவிட்டேன். குழந்தையின் உடல்நிலை மோசமாக இருக்கிறது.
அதன் உடல் முழுவதும் தொற்றானது பரவிவிட்டது. இதனால் குழந்தைக்கு எந்த நேரத்திலும் மரணம் ஏற்படலாம் என தெரிவித்தோம். அவர்கள் அதற்கான படிவத்திலும் கையெழுத்திட்டிருக்கிறார்கள். குழந்தையின் தாய் கூறுவதை போல் எந்த மருத்துவரும் அவரை கிண்டல் செய்யவில்லை. இதை நான் மறுக்கிறேன்.
அவரிடம் பேசும் மருத்துவர்கள் முதுநிலை மருத்துவர்கள். அதே போல் இந்த சிக்கல்கள் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த குழந்தைக்கு 32 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தேரணி ராஜன் தெரிவித்தார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications