தீரன் பார்ட் 2..? சத்தியமங்கலம் காட்டுக்குள் பவாரியா கொள்ளையர் ஊடுருவல்! புலி வேட்டை! வனத்துறை தகவல்
சென்னை: ஈரோடு சத்தியமங்கலம் புலிகள் வேட்டையில் பவாரியா கொள்ளையர்கள் சம்பந்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல் துறை பதில் அளித்துள்ளது.
சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகள் வேட்டையாடப்பட்டது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு வனத்துறை தரப்பில் புலிகள் வேட்டையில் பவாரியா கொள்ளையர்கள் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளியை மகாராஷ்டிரா போலீஸார் கைது செய்துள்ளனர் என தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது. மேலும் மும்பையில் கைதான நபரை தமிழக போலீஸார் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பதில் அளித்தனர்.
இதையடுத்து இந்த வழக்கை நவம்பர் 8-ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். யானைகள் வேட்டை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவ முன்னாள் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் காணொலி மூலம் நவம்பர் 8 இல் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கேரள வனப்பகுதியில் ரயில்களில் அடிபட்டு யானைகள் பலியாவதை தடுப்பது தொடர்பான வழக்கில் ஏற்கெனவே ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாதையை யானைகள் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. எனவே அந்த பகுதியில் எந்தெந்த பகுதியில் கூடுதலாக சுரங்கப்பாதைகள் அமைக்கலாம் என்பது குறித்து தமிழக- கேரள வனத்துறை அதிகாரிகளும் ரயில்வே அதிகாரிகளும் இணைந்து ஆய்வு செய்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சத்தியமங்கலத்தில் 5 புலிகள் வேட்டையாடப்பட்ட வழக்கில் ராஜஸ்தானை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். மேலும் புலிகள் வேட்டையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள், புலித் தோல், பல், நகம் யாருக்கு விற்கப்பட்டன, இதில் சர்வதேச தொடர்பு இருக்கிறதா என்றெல்லாம் நீதிபதிகள் கேள்வி எழுப்பிய போதுதான் இந்த விவகாரத்தில் பவாரியா கொள்ளையர்களுக்கு தொடர்பிருப்பதாக தெரிவித்தனர்.
பவாரியா கொள்ளையர்கள் கூர்மையான ஆயுதங்களை கொண்டு மக்களை தாக்கி கொள்ளையடிப்பது வழக்கம். இவர்கள் பெரும்பாலும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்கள் தென்தமிழகத்தை குறி வைத்து கொள்ளையடிக்கிறார்கள். அதிலும் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள வீடுகளையே இவர்கள் குறி வைக்கிறார்கள். தற்போது இவர்களின் பார்வை புலிகளின் பக்கம் திரும்பியுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications