அடித்து உதைச்சு கைது செய்தா எப்படி? செங்கோலால் தமிழகத்துக்கு பெருமையா? பாயிண்டை பிடித்த ஸ்டாலின்
சென்னை: சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளின் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னை திரும்பினார். அப்போது அவர் நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டு இருப்பது தமிழ்நாட்டுக்கு பெருமையா? என்பது தொடர்பாக அவர் வரலாற்று அறிஞர்களை நினைவுக்கூறி கருத்து தெரிவித்தார்.
புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாகவும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 9 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் சென்றார். இந்த சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு நேற்று அவர் சென்னை திரும்பினார்.

அவருக்கு திமுக அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இரவு 10.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.
அப்போது பத்திரிகையாளர் ஒருவர், ‛‛புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்துள்ளார்கள். அது தமிழ்நாட்டுக்கு பெருமை என சொல்கிறார்களே'' என்ற கேள்வியை எழுப்பினார். இதற்கு ஸ்டாலின், ‛‛அது உண்மையான செங்கோலாக இருந்தால் தமிழ்நாட்டுக்கு பெருமை. ஆனால் அது அப்படியானதாக இல்லை என சில வரலாற்று அறிஞர்களே சொல்லி இருக்கிறார்கள்.
சோழர்களுக்கும், செங்கோலுக்கும் தொடர்பு இல்லை என அவர்கள் கூறி உள்ளனர். செங்கோல் நிறுவிய தினத்திலேயே அது வளைந்துவிட்டது. அதற்கு உதாரணம் தான் இந்தியாவுக்கு பதக்கங்களுடன் புகழ் வாங்கி கொடுத்த மல்யுத்த வீராங்கணைகளை அடித்து உதைத்து கைது செய்தது தான் சாட்சியாக அமைந்துள்ளது'' என்றார்.
இதையடுத்து இன்னொரு நிருபர், ‛‛செங்கோல் தொடர்பான நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றாரே?'' என கேள்வி எழுப்பினார். இதற்கு ஸ்டாலின், ‛‛மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் கலந்துரையாடல் என்று கூறியதால் தான் அவர் அங்கு சென்றார். குடியரசு தலைவர் தான் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைக்க வேண்டும் என்பதை அவர் அங்கு கூறிவிட்டு வந்துள்ளார்'' என்றார்.
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட செங்கோல் லோக்சபாவில் சபாநாயகர் இருக்கையின் அருகே நிறுவப்பட்டது. இந்த செங்கோல் என்பது ஆங்கிலேயர் ஆட்சி மாற்றத்தை குறிக்கும் வகையில் மவுண்ட் பேட்டன், அப்போதைய பிரதமர் நேருவிடம் வழங்கினார். இந்த செங்கோல் திருவாவடூதுறை ஆதினம் மூலம் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டது. நீதி தவறாமல் ஆட்சி செய்வதை குறிக்கும் வகையில் இந்த செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது. மேலும் இந்த செங்கோல் சோழ செங்கோல் என கூறப்பட்ட நிலையில் தான் ஸ்டாலின் இப்படி கூறியுள்ளார்.
மேலும் புதிய நாடாளுமன்றம் திறந்த மே 28 ம் தேதி பாலியல் தொல்லை வழக்கில் பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்யக்கோரி மல்யுத்த வீரர்கள் டெல்லியில் பேரணி சென்றனர். அவர்களை போலீசார் தரதரவென இழுத்து கைது செய்தனர். அதனை குறிப்பிட்டு தான் செங்கோல் முதல் நாளிலேயே வளைந்துவிட்டது என முதல்வர் ஸ்டாலின் தாக்கி பேசியுள்ளார்.
-
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி











Click it and Unblock the Notifications