ஒத்தை தலைமை என்ற பேச்சே காணோமே.. சொத்தையா முடிஞ்சு போச்சே... இதுதான் காரணமா?
அதிமுக கூட்டத்தில் ஒற்றை தலைமை என்ற விவாதம் எழவில்லை என்று கூறப்படுகிறது
Recommended Video
சென்னை: அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட ஒத்தை தலைமை என்ற விவாதமே இல்லாமல், இன்றைய அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து முடிந்துள்ளது.
முதல்வர், துணை முதல்வர் என்று இரு பெரும் தலைமை இருக்கும்போது, ராஜன் செல்லப்பா ஒற்றை தலைமை என்று பற்ற வைத்த விவாதம் இன்று கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது.
ஒரு நிர்வாகி கட்சி தலைமையையும் தாண்டி கருத்து சொன்னதற்கு, அவரை அதிமுக தலைமை எந்த வகையிலும் கண்டிக்கவில்லை. அதே சமயம் மற்ற நிர்வாகிகளை வாயே திறக்கக்கூடாது என்று கண்டிஷன் போட்டுவிட்டது.

ஏன் பேசவில்லை?
இதையும் மீறி திருப்பரங்குன்றத்தில் ஆலோசனை கூட்டம் நடந்ததற்கும் எந்தவித மறுப்பும், கருத்தும் அதிமுக தலைமை சொல்லவில்லை. இந்த இடத்தில் அதிமுகவின் மவுனத்திற்கு அர்த்தம் புரியவில்லை. இதனிடையே, யார் அந்த ஒற்றை தலை என்பதில் விவாதம் எழுந்தது. ஓபிஎஸ் ஒரு தரப்பு, எடப்பாடி ஒரு தரப்பு என்று போட்டி இருப்பதாக தகவல்கள் கசிந்தன.

கண்டிப்பு
ஆனால் ஒற்றை தலைமை பற்றி யாருமே பேசவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்? இரு தலைமைகள் இருக்கும்போது, ஒரு தலைமையை மட்டும் எதிர்த்து கருத்து சொன்னால், மற்றவர்களும் கண்டிப்பாக பேச ஆரம்பிப்பார்கள்.

தர்மசங்கடம்
ஏற்கனவே உள்ள பூசல் இன்னும் வெடித்து பெரிய தர்மசங்கடத்தில் கொண்டு போய் விடும், கட்சியின் இமேஜ்-ம் மேலும் உடையும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக வேண்டுமானால் ஒற்றை தலைமை விவாதம் எழுப்பப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

நிர்வாகிகள்
அது மட்டுமில்லை.. ராஜன் செல்லப்பா போல, வேறு யாராவது தலைமைக்கு எதிரான கருத்துக்களை சொல்ல நேரிடும் என்பதாலேயே நிர்வாகிகளுக்கு வாய்ப்பூட்டும் போடப்பட்டுள்ளது. அதனால்தான், கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களை தனித்தனியே கேட்டறிய அதிமுக தலைமை ஏற்பாடு செய்யும் என்றும் கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டதாக தெரிகிறது.

கருத்து சொல்லவில்லை
இதன்மூலம் யாருக்கெல்லாம் அதிருப்தி உள்ளதோ அவர்கள் தலைமையிடம் வெளிப்படையாக பேச வாய்ப்பு கிடைக்கும், அதன்மூலம் பிரச்சனைகள் ஓரளவு களையப்படும் என்று நம்பப்படுகிறது. நடந்து முடிந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், கேபி முனுசாமி, வைத்திலிங்கம் மட்டுமே பேசி உள்ளனர். மற்றவர்கள் எந்த கருத்தையும் சொல்லவில்லையாம்.

அவசியம்தானா?
அதனால் ஒற்றை தலைமை என்பது, பொதுக்குழுவை கூட்டி விவாதிப்பது அல்லது நிர்வாகிகளின் கருத்தை கேட்டறிவது அல்லது ஒற்றை தலைமை அவசியம்தானா என்பதை ஓபிஎஸ், இபிஎஸ் கூடி முடிவு செய்வது என்பன போன்ற நடவடிக்கைகளுக்கு பிறகுதான் முடிவாகும் சூழல் உள்ளது. இதன் காரணங்களுக்காகவே இன்றைய கூட்டத்தில் ஒற்றை தலைமை விவாதம் எழுப்பவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications