2025ல் மொத்தம் 4 கிரகணங்கள்.. ஆனால் இந்தியாவில் ஒன்றுதான் தெரியும்! காரணம் இதுதான்
சென்னை: நாளை மறுநாள் பிறக்க உள்ள 2025ம் ஆண்டில் மொத்தம் 4 கிரகணங்கள் தெரிய உள்ளன. ஆனால் இதில் ஒரே ஒரு கிரகணம்தான் இந்தியாவிலிருந்து பார்க்க முடியும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
சூரிய, சந்திர கிரகணங்கள்: உஜ்ஜயினியில் உள்ள ஜிவாஜி வானியல் ஆய்வகத்தின் கண்காணிப்பாளர் ராஜேந்திர பிரகாஷ் குப்த் இது குறித்து கூறுகையில், "அடுத்த ஆண்டு 2 சூரிய கிரகணம் மற்றும் 2 சந்திர கிரகணம் நடைபெறும். முதல் கிரகணமாக சந்திர கிரகணம் நடைபெறுகிறது. மார்ச் மாதம் 14ம் தேதியன்று இந்த கிரகணம் நடைபெறுகிறது. ஆனால் இதை இந்தியாவில் பார்க்க முடியாது. ஏனெனில் சந்திர கிரகணம் நடக்கும்போது இந்தியாவில் பகல் பொழுதாக இருக்கும்.

இந்தியா தவிர, அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, மேற்கு ஆப்பிரிக்கா, மற்றும் வடக்கு மற்றும் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் போன்ற பகுதிகளில் கிரகணம் தெரியும்.
சூரிய கிரகணம்: அதே மாதத்தில் சூரிய கிரகணம் நடைபெறுகிறது. அதாவது மார்ச் மாதம் 29ம் தேதி ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நடைபெறுகிறது. ஆனால் இதுவும் இந்தியாவில் தெரியாது. மற்றபடி வட அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல், ஐரோப்பா மற்றும் வடமேற்கு ரஷ்யாவில் தெரியும்.
இந்தியாவில் எப்போது தெரியும்?: செப்டம்பர் மாதம் 7-8ம் தேதிகளில் முழு சந்திர கிரகணம் நடக்கும். இது மட்டும்தான் இந்தியாவில் தெரியும். இந்தியா மட்டுமல்லாது ஆசியாவின் பிற நாடுகளிலும், ஐரோப்பா, அண்டார்டிகா, மேற்கு பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளிலும் கிரகணம் தெரியும். சூரிய கிரகணம் நடக்கும் போது, சூரியன் மறையும். ஆனால் சந்திர கிரகணம் நடக்கும் போது சந்திரன் மறையாது. மாறாக அது சிவப்பு நிறத்தில் தெரியும். இது அக்.7ம் தேதி இரவு 8.58க்கு தொடங்கி, அடுத்த நாள் அதிகாலை 2.25 மணிவரை சந்திர கிரகணம் நடக்கும்.
ஆண்டின் இறுதி சூரிய கிரகணம்: அடுத்த ஆண்டின் இறுதி சூரிய கிரகணம் செப்.21-22ம் தேதிகளில் நடைபெறும். நியூசிலாந்து, கிழக்கு மெலனேசியா, தெற்கு பாலினேசியா மற்றும் மேற்கு அண்டார்டிகாவில் பகுதி சூரிய கிரகணத்தை பார்க்க முடியும். இந்தியாவில் பார்க்க முடியாது.
இது தவிர, ஜனவரி 3-4ம் தேதிகளில் விண்கல் மழை பொழியும். ஒரு மணி நேரத்திற்கு 80-120 விண்கற்கள் பொழியும். இதனை தொடர்ந்து 2025 ஆகஸ்ட் மாதம் 12-13ம் தேதிகளில் 'பெர்சீட்ஸ்' விண்கல் மழை பொழியும். இந்த சமயத்தில் ஒரு மணி நேரத்திற்கு 100 விண்கற்கள் வரை பொழியும். இறுதியாக டிசம்பர் 14-15ம் தேதிகளில் 'ஜெமினிட்ஸ்' விண்கல் மழை பொழியும். இந்த சமயத்தில் ஒரு மணி நேரத்திற்கு 150 விண்கற்கள் பூமி மீது பொழியும்" என தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications