Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தனி அறைக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்தனர்.. ஆந்திர போலீஸ் மீது கிருஷ்ணகிரி பெண் பரபரப்பு புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருடியதாக ஒப்புக்கொள்ள வற்புறுத்தி தன்னை நிர்வாணப்படுத்தி ஆந்திர போலீசார் சித்ரவதை செய்ததாக தமிழக பழங்குடியின பெண் ஒருவர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரில் பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்து சென்ற மிருகத்தனமான செயல் ஒட்டு மொத்த தேசத்தை தலைகுனியவைத்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆந்திர போலீசார் நிர்வாணப்படுத்தி துன்புறுத்தியதாக தமிழக பழங்குடியின பெண் ஒருவர் அளித்த புகார் திடுக்கிட வைத்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

They stripped her and raped her - Krishnagiri woman complains against Andhra police

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகாவில் உள்ள புலியாண்டபட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண்ணின் கணவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணைக்காக அந்த நபரையும் அவரது மனைவியையும் அழைத்து சென்ற ஆந்திர போலீசார் கொடூரமாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். கணவரை நிர்வாணப்படுத்தி உடல் முழுக்க மிளாகாய் தூளை பூசியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இது தொடர்பாக அந்த பெண் அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஆந்திர போலீசார் என்னையும் எனது அத்தை, கணவரை அழைத்து சென்றனர். நகையை கொடுக்குமாறு பயங்கரமாக அடித்தனர். எனது கணவரை லத்தியால் மிகக்கொடூரமாக தாக்கினர். ஆடைகளை அவிழ்த்து விட்டு பயங்கரமாக அடித்ததோடு மிளகாய் தூளை உடல் முழுவதும் பூசி, சித்ரவதை செய்தனர். பிறகு எனது கணவரை காட்டுகிறேன் என்று இரவு வந்த ஒரு போலீஸார் என்னை கூட்டிக்கொண்டு போனார்.

They stripped her and raped her - Krishnagiri woman complains against Andhra police

ஒரு அறைக்குள் போனதும் கதவை பூட்டி விட்டு என்னையும் பின்பக்கம் கடுமையாக அடித்தனர். எனது ஆடைகளை அவிழ்த்துவிட்டு பலாத்காரம் செய்தனர். கொடூரமாக சித்ரவதை செய்தனர். நடந்த சம்பவத்தை எங்காவது சொன்னால் உன் கணவரை அடித்து கொலை செய்து விடுவோம். உங்கள் மீது கஞ்சா வழக்கு போடுவோம் என்று மிரட்டியதாகவும் பரபரப்பாக பேட்டி அளித்தார். மேலும் இது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பழங்குடியின பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

They stripped her and raped her - Krishnagiri woman complains against Andhra police

கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் ஆந்திரா போலீஸாருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே, இவ்வழக்கின் விசாரணையை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் இச்சம்பவத்தில் தொடர்புடைய ஆந்திரா போலீஸார் 20 பேர், அவர்களுக்கு துணையாக இருந்த தமிழக போலீஸார் மீது சட்டப்படி நடவடிக்க எடுத்து அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+