2016 தேர்தலில் விசிக தனித்து போட்டியிட்டது ஏன்?.. திமுகவுக்கு எதிரான பிளானா?.. திருமா சொன்ன ரகசியம்
சென்னை: 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மக்கள் நல கூட்டணி என்பதை தொடங்கி தனித்து போட்டியிட்டது ஏன் என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் விளக்கியுள்ளார்.
திமுக பொதுக் குழு கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்டார். இதை கொண்டாடும் வகையில் திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
இதில் கூட்டணி கட்சி தலைவர்களான திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில் சனாதனக் கும்பலின் இலக்கே திமுகவை அழிக்க வேண்டும் என்பதுதான்.

சங் பரிவார்
அதற்கு ஒரு போதும் இடம்தரக் கூடாது. சங் பரிவார் பேசும் அரசியலை எதிர்த்தால் நாம் ஏதோ இந்துக்களுக்கு எதிராக பேசுவதாக நம் மீது அவதூறு பரப்புகிறார்கள். நாம் இந்துக்களுக்கு எதிரி அல்ல. இந்து சமூகம் மிகப் பெரியது. இந்துக்கள்தான் நம் கட்சிகளில் நிறைந்து இருக்கிறார்கள். மத வெறியின் மூலம் மக்களை பிரித்து அழிக்க நினைக்கும் நாசக்கார அரசியலை சங்பரிவார் கையில் எடுத்துள்ளது.

பாசிசம்
பாசிசம்தான் ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கையாகும் என்றார். மேலும் 2016ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் விசிக தனித்து போட்டியிட்டது ஏன் என்பது குறித்தும் திருமாவளவன் விளக்கியுள்ளார். அவர் கூறுகையில் 2016 ஆம் ஆண்டு நாங்கள் ஏதோ திமுகவிற்கு எதிராக சதி செய்வதற்காக நாங்கள் தனித்து நிற்கவில்லை.

தனித்து போட்டி ஏன்
நாங்கள் அவ்வாறு சென்றதற்கான காரணம் ஸ்டாலின்தான். 2014 இல் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த உடனேயே எங்களை அழைத்து நாங்கள் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட போகிறோம். வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக முடிவு செய்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் இனி நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள் என ஸ்டாலின் சொன்னார். அதனால்தான் நாங்கள் மக்கள் நல கூட்டணி என்ற ஒன்றை ஆரம்பித்தோம். அதில் நாங்கள் போட்டியிட்டோம் என்றார்.

ஒரு இடத்திலும் வெல்லவில்லை
கடந்த 2015 ஆம் ஆண்டு மக்கள் நல கூட்டணி தொடங்கப்பட்டது. இதில் தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் இணைந்தன. விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 2016 சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணியினர் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.
-
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே?












Click it and Unblock the Notifications