2016 தேர்தலில் விசிக தனித்து போட்டியிட்டது ஏன்?.. திமுகவுக்கு எதிரான பிளானா?.. திருமா சொன்ன ரகசியம்
சென்னை: 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மக்கள் நல கூட்டணி என்பதை தொடங்கி தனித்து போட்டியிட்டது ஏன் என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் விளக்கியுள்ளார்.
திமுக பொதுக் குழு கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்டார். இதை கொண்டாடும் வகையில் திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
இதில் கூட்டணி கட்சி தலைவர்களான திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில் சனாதனக் கும்பலின் இலக்கே திமுகவை அழிக்க வேண்டும் என்பதுதான்.

சங் பரிவார்
அதற்கு ஒரு போதும் இடம்தரக் கூடாது. சங் பரிவார் பேசும் அரசியலை எதிர்த்தால் நாம் ஏதோ இந்துக்களுக்கு எதிராக பேசுவதாக நம் மீது அவதூறு பரப்புகிறார்கள். நாம் இந்துக்களுக்கு எதிரி அல்ல. இந்து சமூகம் மிகப் பெரியது. இந்துக்கள்தான் நம் கட்சிகளில் நிறைந்து இருக்கிறார்கள். மத வெறியின் மூலம் மக்களை பிரித்து அழிக்க நினைக்கும் நாசக்கார அரசியலை சங்பரிவார் கையில் எடுத்துள்ளது.

பாசிசம்
பாசிசம்தான் ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கையாகும் என்றார். மேலும் 2016ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் விசிக தனித்து போட்டியிட்டது ஏன் என்பது குறித்தும் திருமாவளவன் விளக்கியுள்ளார். அவர் கூறுகையில் 2016 ஆம் ஆண்டு நாங்கள் ஏதோ திமுகவிற்கு எதிராக சதி செய்வதற்காக நாங்கள் தனித்து நிற்கவில்லை.

தனித்து போட்டி ஏன்
நாங்கள் அவ்வாறு சென்றதற்கான காரணம் ஸ்டாலின்தான். 2014 இல் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த உடனேயே எங்களை அழைத்து நாங்கள் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட போகிறோம். வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக முடிவு செய்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் இனி நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள் என ஸ்டாலின் சொன்னார். அதனால்தான் நாங்கள் மக்கள் நல கூட்டணி என்ற ஒன்றை ஆரம்பித்தோம். அதில் நாங்கள் போட்டியிட்டோம் என்றார்.

ஒரு இடத்திலும் வெல்லவில்லை
கடந்த 2015 ஆம் ஆண்டு மக்கள் நல கூட்டணி தொடங்கப்பட்டது. இதில் தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் இணைந்தன. விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 2016 சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணியினர் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.
-
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
மகளிர் உரிமைத் தொகை.. திட்டத்தை அறிவித்த திருச்சியில் நின்று மு.க.ஸ்டாலின் சொன்ன வார்த்தை! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
உதயநிதி ஸ்டாலினை மதிக்காத கேஎன் நேரு? எழுந்து நின்றும் கண்டுகொள்ளவில்லையே.. இருவருக்கும் சண்டையா? -
நெல்லை முபாரக் எங்கே போட்டி? திமுகவிடம் எஸ்டிபிஐ எதிர்பார்க்கும் தொகுதி எது? பரபரக்கும் தேர்தல் களம் -
பிரேமலதா குடும்பத்திற்கு ஸ்டாலின் தரும் இன்னொரு சர்ப்ரைஸ்! பிரபாகரன் போட்டியிடும் தொகுதி -EXCLUSIVE -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
திருச்சி திமுக மாநில மாநாடு LIVE:உங்க அப்பனே வந்தாலும் நடக்காது! பாஜவுக்கு சவால் விட்ட ஸ்டாலின் -
குலுங்கியது திருச்சி.. திமுக மாநாட்டில் ரேம்ப் வாக் செய்த ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாகம் -
என்டிஏவுக்கு தமிழ்நாடே 'நோ'.. நான் இருக்கும் வரை பாஜகவுக்கும் நோ எண்ட்ரி.. அதிர விட்ட மு.க.ஸ்டாலின்! -
நிலம் அபகரிப்பு.. அதிமுக MP தம்பிதுரைக்கு எதிரான வழக்கு! மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு! -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்!












Click it and Unblock the Notifications