எல்லோரையும் வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு எப்படி பேரம் பேச முடியும்... உருக்கமாக பேசிய திருமாவளவன்!
சென்னை: வாய்க்கு வந்தபடி எல்லோரையும் அவதூறாக பேசிய பிறகு எனக்கு பேரம் பேச தெரியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
நாங்கள் 6 தொகுதிகளை வாங்கவில்லை. 6 எம்.எல்.ஏக்களை வாங்கியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள், இந்திய கம்யுனிஸ்டுக்கு 6 தொகுதிகள், முஸ்லீம் லீக் 2 தொகுதிகள் ஒதுக்கி விட்டது. ஐயூஎம்எல் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் திமுக ஒதுக்கியது. இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகள் கொடுங்கள்; குறைந்தது 8 தொகுதியாவது கொடுங்கள் என்று கூறியது. ஆனால் இதை ஏற்க மறுத்த திமுக 6 தொகுதியையே கொடுத்தது.

இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அந்த கட்சியின் தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் குறைந்த தொகுதி ஒதுக்கப்பட்டது தொடர்பாக திருமாவளவன் கூறியதாவது:- 5 ஆண்டாக திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வந்தோம். எனக்கு பேரம் பேசும் வலிமை இல்லை. அதிமுக, பாஜகவுடன் பேரம் பேச முடியும் என எண்ணி இருந்தால் இதைக் காட்டி பேரம் பேசி இருக்க முடியும்.
வாய்க்கு வந்தபடி எல்லோரையும் அவதூறாக பேசிய பிறகு எனக்கு பேரம் பேச தெரியாது. நாங்கள் 6 தொகுதிகளை வாங்கவில்லை. 6 எம்.எல்.ஏக்களை வாங்கியுள்ளோம். சம்பந்தமில்லாமல் எனக்கு கோபம் வராது. நான் கோபப்பட்டால் அதில் நியாயம் இருக்கும் என்று திருமாவளவன் பேசினார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications