பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இத்தனை நாள் இல்லாம இப்போ ஏன்? மத்திய அரசு தலையீடா? திருமாவளவன்
விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதில் எந்த கால பொருத்தமும் இல்லை - திருமாவளவன்
சென்னை: பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற அறிவிப்பில் கால பொருத்தமும் இல்லை, அரசியல் பொருத்தமும் இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார். இவர்களுடன் நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதனும் தேமுதிக சார்பில் ஆனந்தும் போட்டியிடுகிறார்கள். எனினும் அதிமுக, திமுக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அரசியல் கட்சித் தலைவர்கள்
இந்த நிலையில் இங்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பிரச்சாரம் செய்தார். அவர் சத்யா நகர், கிருஷ்ணம்பாளையம், மரப்பாலம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

21 மாத காலம்
அப்போது திமுக ஆட்சியில் இந்த 21 மாத காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். அவர் பேசுகையில் மத்திய நிதி நிலை அறிக்கையில் சிறுபான்மையினருக்கு பறிக்கப்பட்ட சலுகைகள், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது என பிரச்சாரம் செய்தார். இதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

ஈரோடு இடைத்தேர்தல்
அவர் கூறுகையில் ஈரோடு இடைத்தேர்தலில் திமுக தேர்தல் முறைகேடு ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகளால் பரப்பரப்படுகிறது. தேர்தல் ஆணையம் பாஜக கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் திமுக தேர்தல் விதிமுறைகள் மீறினால் அவர்கள் நடவடிக்கை எடுக்கட்டும். பிபிசி நிறுவனம் அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை பழி வாங்கி வருகிறது.

நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடியின் கொடுகோள் ஆட்சி உச்சத்தில் உள்ளது என்பதற்கு இதுவே சாட்சி. விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற அறிவிப்பில் கால பொருத்தமும் இல்லை, அரசியல் பொருத்தமும் இல்லை, பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை தற்போது அறிவிப்பதற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பினார். இலங்கையில் உள்ள சிங்கள அரசை அச்சுறுத்த மத்திய பாஜக அரசு தலையிடுகிறது என திருமாவளவன் குற்றம்சாட்டினார்.

பிரபாகரன்
விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் உரிய நேரத்தில் மக்கள் முன்பு தோன்றுவார் என்றும் பழ நெடுமாறன் திடீர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆனால் இதை இலங்கை அரசு மறுத்தது. அது போல் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் இதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
-
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்?












Click it and Unblock the Notifications