பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இத்தனை நாள் இல்லாம இப்போ ஏன்? மத்திய அரசு தலையீடா? திருமாவளவன்
விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதில் எந்த கால பொருத்தமும் இல்லை - திருமாவளவன்
சென்னை: பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற அறிவிப்பில் கால பொருத்தமும் இல்லை, அரசியல் பொருத்தமும் இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார். இவர்களுடன் நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதனும் தேமுதிக சார்பில் ஆனந்தும் போட்டியிடுகிறார்கள். எனினும் அதிமுக, திமுக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அரசியல் கட்சித் தலைவர்கள்
இந்த நிலையில் இங்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பிரச்சாரம் செய்தார். அவர் சத்யா நகர், கிருஷ்ணம்பாளையம், மரப்பாலம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

21 மாத காலம்
அப்போது திமுக ஆட்சியில் இந்த 21 மாத காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். அவர் பேசுகையில் மத்திய நிதி நிலை அறிக்கையில் சிறுபான்மையினருக்கு பறிக்கப்பட்ட சலுகைகள், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது என பிரச்சாரம் செய்தார். இதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

ஈரோடு இடைத்தேர்தல்
அவர் கூறுகையில் ஈரோடு இடைத்தேர்தலில் திமுக தேர்தல் முறைகேடு ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகளால் பரப்பரப்படுகிறது. தேர்தல் ஆணையம் பாஜக கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் திமுக தேர்தல் விதிமுறைகள் மீறினால் அவர்கள் நடவடிக்கை எடுக்கட்டும். பிபிசி நிறுவனம் அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை பழி வாங்கி வருகிறது.

நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடியின் கொடுகோள் ஆட்சி உச்சத்தில் உள்ளது என்பதற்கு இதுவே சாட்சி. விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற அறிவிப்பில் கால பொருத்தமும் இல்லை, அரசியல் பொருத்தமும் இல்லை, பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை தற்போது அறிவிப்பதற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பினார். இலங்கையில் உள்ள சிங்கள அரசை அச்சுறுத்த மத்திய பாஜக அரசு தலையிடுகிறது என திருமாவளவன் குற்றம்சாட்டினார்.

பிரபாகரன்
விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் உரிய நேரத்தில் மக்கள் முன்பு தோன்றுவார் என்றும் பழ நெடுமாறன் திடீர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆனால் இதை இலங்கை அரசு மறுத்தது. அது போல் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் இதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications