Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வள்ளுவரை யாருமே நேரில் பார்த்ததில்லை.. அவரது தலையில் குல்லா கூட வைக்கலாம்.. திருமாவளவன் அதிரடி

திருவள்ளுவருக்கு குல்லா கூட வைக்கலாம் என்று திருமாளவன் பேசியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவன், மகாவிஷ்ணுவை யார் நேர்ல பார்த்தது? அதுபோல வள்ளுவரையும் யாருமே நேரில் பார்த்ததில்லை.. அவர் ஒரு கற்பனை.. அவரை இந்து சாமியாராக்க பாஜக முயற்சிக்கிறது.. ஏன், திருவள்ளுவர் தலையில் குல்லா கூட வைக்கலாம்" விசிக தலைவர் திருமாவளவன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

நாட்கள் கடந்தும் திருவள்ளுவர் விவகாரம் இன்னும் ஓய்ந்த பாடில்லை.. ஏதாவது ஒரு ஊரில், ஏதாவது ஒரு ரூபத்தில் வள்ளுவர் குறித்த சர்ச்சை சம்பவங்களும், அது சம்பந்தமான வெளிப்பாடுகளும் கட்சி வாரியாக நிகழ்ந்து வருகின்றன.

பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை, கடந்த 3-ம் தேதி நள்ளிரவு மர்ம நபர்களால் அவமதிப்பு செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சம்பவம் குறித்து, தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி, இந்த காரியத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பிள்ளையார்பட்டி

பிள்ளையார்பட்டி

இதற்கிடையில், மர்ம நபர்களை உடனே கைது செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்தும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

கண்டிக்கிறோம்

கண்டிக்கிறோம்

"திருவள்ளுவர் சிலை மீது சாணி அடிப்பதால் அவரது மேன்மை ஒன்றும் கெட்டுவிட போவதில்லை. ஆனாலும் இதை வன்மையாக கண்டிக்கிறோம். அத்துடன் அவரது சிலைக்கு ருத்ராட்ச மாலை, காவி துண்டு அணிவித்ததையும் ஏற்க முடியாது. வள்ளுவருக்கு எந்த சாயத்தையும் பூசி அவரை சுருக்கி விடமுடியாது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறது? என தெரியவில்லை.

பெரியார் மண்

பெரியார் மண்

திருவள்ளுவர் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடி, அதன்மூலம் தமிழகத்தில் காலூன்ற பாஜக நினைக்கிறது. திருவள்ளுவரை இந்து சாமியாராக்கவும் அக்கட்சி முயற்சிக்கிறது. பாஜகவின் நினைப்பு ஒருபோதும் தமிழகத்தில் நிறைவேறாது. இது பெரியார் மண். வள்ளுவமும்-அம்பேத்கரின் கொள்கைகளும் வேறூன்றி கிடக்கும் மண்.

குல்லா கூட வைக்கலாம்

குல்லா கூட வைக்கலாம்

திருவள்ளுவர் ஆண்டு அறிவியல் பூர்வமாக இல்லை. சிவன், மகாவிஷ்ணுவை யார் நேரில் பார்த்தது.. அப்படித்தான் திருவள்ளுவரையும் யாரும் நேரில் பார்த்ததில்லை.. அவர் ஒரு கற்பனை.. அவரது தலையில் குல்லா கூட வைக்கலாம்.. சமணர்களும், பவுத்தர்களும், இஸ்லாமியர்கள் கூட திருவள்ளுவருக்கு உரிமை கோரலாம்.. வள்ளுவன் இருந்த போது இந்து மதம் இல்லை" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+