அதிர வைத்த சென்னிமலை கொடூரம்.. கிறிஸ்தவர்கள் மீது அட்டாக்! தமிழ்நாட்டுக்கே ஆபத்து என திருமா வார்னிங்
சென்னை: ஈரோடு சென்னிமலையில் வீட்டில் ஜெபம் செய்த கிறிஸ்துவர்களை இந்து முன்னணி அமைப்பினர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்தவர் ஜான் பீட்டர். தனது வீட்டில் உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து இவர் ஜெபம் நடத்துவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் யாரும் அங்கு வந்து யாரும் ஜெபம் செய்யக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக பீதியடைந்த அனைவரும் அங்கிருந்து திரும்பி சென்றுவிட்டனர். ஆனால் ஜான் பீட்டர் மட்டும் தனது வீட்டிலேயே குடும்பத்தினருடன் ஜெபம் செய்து உள்ளார். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் கூட்டமாக வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்த 30 அதிகமானோர் ஜெபம் முடிந்து வெளியில் வந்த அந்த 6 பேர் மீதும் கொலை வெறித் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு பெருந்துறை மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். உயிருக்குப் போராடியவர்கள் குணமடைந்தும் வீடு திரும்ப முடியாமல், உறவினர்களின் வீடுகளில் பாதுகாப்பு கருதி தங்கி உள்ளார்கள். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் கண்டங்களை பதிவு செய்து உள்ளார்கள். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னிமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியினர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டார்கள்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "ஈரோடு, சென்னிமலை அருகே கத்தகொடிக்காடு என்னுமிடத்தில் கிறித்தவ மக்களின் மீது இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு மதவெறி அமைப்பினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தகைய மதவெறியாட்டம் தமிழகத்தில் தலைதூக்குவது மிகவும் ஆபத்தான போக்காகும். வன்முறையில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். சங்பரிவார்களின் இத்தகு வெறுப்பு அரசியல் மற்றும் வன்முறைப் போக்கினைக் கண்டித்து நேற்று சென்னிமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னி மலையை ஒட்டிய திருமுகம் மலர்ந்தபுரம் பகுதியில் இதே போல் வழிபாடு நடத்தியவர்கள் மீது இதே கும்பல்தான் தாக்குதல் நடத்தியது. எனவே இந்த மனிதநேயமற்ற மதவெறியர்களை உடனே சிறைப்படுத்த வேண்டும் என விசிக சார்பில் வலியுறுத்துகிறோம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்!












Click it and Unblock the Notifications