விஜய் கருத்தை வரவேற்கிறேன்.. டோட்டலாக டோனை மாற்றிய திருமாவளவன்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க
சென்னை: விவசாய நிலத்தில் விமான நிலையம் வராது என்ற உத்தரவாதத்தை கொடுக்க வேண்டும் எனவும் இல்லையெனில், பரந்தூர் விவசாய மக்களையும், பொதுமக்களையும் நேரகாக தலைமைச் செயலகத்துக்கு அழைத்து வந்து உங்களை நேரில் சந்தித்து முறையிடும் நிலைமை உண்டாகும் என முதல்வர் ஸ்டாலினுக்கு தவெக தலைவர் விஜய் வேண்டுகோள் வைத்த நிலையில் விஜய்யின் இந்த கருத்துக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திமுக மற்றும் பாஜகவுடன் கட்டாயமாக கூட்டணி கிடையாது என்று வெளிப்படையாக, அழுத்தமாக அறிவித்துள்ளார். திமுக அரசியல் எதிரி என்றும், பாஜகவை கொள்கை எதிரி என்றும் கூறிவிட்டார். ஆனால் அதிமுகவை பற்றி எதுவும் சொல்லவில்லை. விமர்சனங்களாக சில கருத்துக்களை சொல்லியிருந்தாலும் கூட, அதிமுகவும் எங்களுக்கு எதிரி தான்..

அதிமுகவும் எங்களுக்கு கொள்கை ரீதியாக எதிரி என்று அவர் சொல்லவில்லை. அங்கே ஒரு கேள்வி எழுகிறது. திமுகவை ஆளும் கட்சி என்பதால் எதிர்க்கிறார். பாஜகவை தமிழர்களுக்கு விரோதமான கட்சி என்பதால் எதிர்க்கிறார் என்று நாம் புரிந்துகொண்டாலும், அதிமுகவை தோழமை கட்சியாக பார்க்கிறாரா என்ற கேள்வியும் எழுகிறது. அதற்கு அவர் தான் பதில் சொல்ல வேண்டும்" என்றார்.
அப்போது விஜய் பரந்தூர் விமான நிலைய மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் விவசாயிகள், பொதுமக்களை அழைத்துக்கொண்டு சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப்போவதாக விஜய் பேசியிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தொல் திருமாவளவன், "பரந்தூர் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றால், விஜய்யின் இந்த கருத்தினை நான் வரவேற்கிறேன்" என்றார்.
முன்னதாக நேற்று நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் பேசிய விஜய், பாஜக, திமுகவுடன் கூட்டணி கிடையாது என கூறினார். மேலும் பாஜகவுடன் கூட்டணி வைக்க இது ஒன்று அதிமுக, திமுக கிடையாது.. தமிழக வெற்றிக் கழகம்.. பரந்தூர் விமான நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை சென்று நேரில் சந்திக்க வேண்டும். அந்த இடத்தில் விமான நிலையம் வராது என்ற உத்தரவாதத்தை அவர்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டும். இதையெல்லாம் அப்படியே கடந்து போயிடலாம் என்று நினைத்தீர்கள் என்றால், பரந்தூர் விவசாய மக்களையும், பொதுமக்களையும் நேரகாக தலைமைச் செயலகத்துக்கு அழைத்து வந்து உங்களை நேரில் சந்தித்து முறையிடும் நிலைமை உண்டாகும். இந்த நிலைமை வராது என்று நம்புகிறேன். அதையும் மீறி வந்தால், அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். இவ்வாறு விஜய் பேசியிருந்தார்.
-
மீண்டும் மீண்டுமா.. பிரசார வேனில் தொங்கிய தவெக தொண்டர்.. பவுன்சர் செய்த காரியம் -
திருப்பரங்குன்றம்: அவ்வளவு பஞ்சாயத்து நடந்துட்டு இருக்கு.. விஜய் மட்டும் வாய் திறக்கலையே! -
மாட்டிகிட்டியே பங்கு! திமுகவின் வாக்குறுதியை காப்பியடித்து தவெகவின் வாக்குறுதியாக அறிவித்த விஜய் -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
“வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டி வருகின்றனர்”- விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு -
தேர்தல் களத்தை விடுங்க.. சந்தையிலும் சூடுபறக்கும் விசில்.. விஜய் எண்ட்ரியால் திணறும் உற்பத்தியாளர்கள் -
ரொக்கமாக சம்பளம் வாங்கி.. வரி கட்டாமல் மறைத்த விஜய்.. வருமான வரித்துறை கேஸ்.. விஜய் மேல்முறையீடு -
ஜனநாயகன் தயாரிப்பாளருக்காக விஜய் எடுத்த பெரிய முடிவு.. மூன்று பேருக்குள் போட்டி! ப்ளூ சட்டை மாறன் ரியாக்ஷன் -
நேர்ல வரலனாலும் நேராகவே பேசுறாரே! ஹாலோகிராமில் கும்பகோணத்தை அதிரவைத்த AI விஜய் -
கோவையில் கேபிள் டிவியில் ஓடிய விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம்.. உரிமையாளரை கைது செய்த போலீஸ் -
விஜய் என்கிட்ட கேட்ட கேள்வி.. நான் எதிர்பார்க்கல! சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்! ஓபனாக பேசிய ராதாரவி -
குடும்பத்தை பார்க்காதவர் எப்படி மக்களை பார்ப்பார்..சுத்து போட்ட மக்கள்..தெறித்து ஓடிய தவெக வேட்பாளர்












Click it and Unblock the Notifications