ராகுலை கமல் சந்தித்த பரபர பின்னணி.. காங்கிரஸுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி?- திருநாவுக்கரசர் பதில்
Recommended Video

சென்னை: காங்கிரஸ் கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைப்பதாக ராகுலிடம் கமல்ஹாசன் தெரிவித்ததாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். இதைத் தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்து வருகிறார்.
தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்கு மக்களிடம் தங்கள் தொகுதிக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்தும், தீரா பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்து வருகிறார். இந்நிலையில் கூட்டணி என்ற ஒரு விவகாரம் மக்கள் நீதி மய்யம் கட்சியையும் விட்டு வைக்கவில்லை.

முற்றுப்புள்ளி
டெல்லியில் மக்கள் நீதி மய்யம் கட்சியை பதிவு செய்வதற்காக டெல்லி சென்ற கமல் ராகுலை சந்தித்து பேசினார். அது போல் கர்நாடக முதல்வர் குமாரசாமி பதவியேற்பு விழாவில் ராகுலை கமல்ஹாசன் மீண்டும் சந்தித்து பேசினார். இது கூட்டணிக்கான அச்சாரம் என தெரிவிக்கப்பட்டது. எனினும் இது மரியாதை நிமித்தம்தான் என கமல் முற்றுப்புள்ளி வைத்தார்.

கூட்டணி வைக்க விருப்பம்
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் எஸ். திருநாவுக்கரசர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கமல்ஹாசன் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

பக்கா காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியை ஆதரித்ததோடு கூட்டணி வரும் கமலுக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல், திமுகவுடன் கூட்டணி இல்லை என தெரிவித்தார். காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் நேரத்தில் பார்க்கலாம் என்றார். மேலும் தனது தந்தை பக்கா காங்கிரஸ்காரர் என்றும் கூறினார்.

அறிவிப்பு வருமா
தற்போது திருநாவுக்கரசரும் கமல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்ற தகவலை பார்க்கும்போது திமுகவில் அங்கமாக உள்ள காங்கிரஸில் கமல் எப்படி கூட்டணி வைக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ்- திமுக கூட்டணி உடைக்கிறதா என்றும் கருதத் தோன்றுகிறது. எனினும் கமல் இதுகுறித்து முறையாக அறிவித்தால் மட்டுமே எதையும் யூகிக்க முடியும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications