தமிழக அரசு கண்காட்சியில் காவி நிறத்தில் திருவள்ளுவர் ஓவியம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
சென்னை: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டதன் 25 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை கோட்டூர்புரத்தில் ஓவிய கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் மாணவர்கள் வரைந்த ஓவியத்தில் காவி உடையில் திருவள்ளுவர் சிலை வரையப்பட்டிருந்தது. இது சர்ச்சையான நிலையில் குறிப்பிட்ட மாணவரிடம் இனி காவி நிறத்தில் திருவள்ளுவர் சிலை வரையக்கூடாது என்று அறிவுறுத்தினார். தற்போது கண்ட்காட்சியில் இருந்து அந்த ஓவியம் நீக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதனை கொண்டாடும் வகையில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், "திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஓவிய கண்காட்சி" நடந்து வருகிறது. காலை 8 மணியில் இருந்து இந்த கண்காட்சி நடந்து வருகிறது.

இந்த ஒவிய கண்காட்சியில் மாணவ - மாணவிகள் பல்வேறு விதமான திருவள்ளுவர் சிலைகளை ஓவியமாக வரைந்து காட்சிப்படுத்தியிருந்தனர். பல வண்ணங்களில் திருவள்ளுவர் சிலை, ஓவியம் காட்சிப்படுத்தப்பட்டது. இதில் ஒரு மாணவர் காவி நிறத்தில் திருவள்ளுவர் சிலையை வரைந்திருந்தார். இந்த ஓவியமும் இக்கண்காட்சியில்ல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஓவிய கண்காட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார். அப்போது காவி உடையில் திருவள்ளுவர் ஓவியம் வைக்கப்பட்டது குறித்து அவரிடம் சொல்லப்பட்டது. இதையடுத்து பேசிய அன்பில் மகேஷ், 'இந்த மாணவர்களிடம் இப்படி வரையக்கூடாது என்று சொல்லியிருக்கிறோம்' என்று கூறினார்.
இந்த நிலையில் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்ததால், ஓவியக் கண்காட்சியில் இருந்து குறிப்பிட்ட அந்த மாணவர் காவி உடையில் வரைந்திருந்த திருவள்ளுவர் ஓவியம் நீக்கப்பட்டது. தமிழகத்தில் ஏற்கனவே பாஜக திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச நினைப்பதாக பாஜகவை திமுக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இத்தகய சூழலில் அரசு கண்காட்சியிலேயே காவி உடை அணிந்த திருவள்ளுவர் ஓவியம் காட்சிப்ப்படுத்தப்பட்டது பேசுபொருளாகி உள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications