இது நம்ம சர்கார்... 49P இருக்கு... உங்கள் ஓட்டு, உங்களுக்கே
சென்னை: சர்கார் பட பாணியில், உங்கள் வாக்கை வேறு யாரேனும் பதிவு செய்திருந்தால், தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டு உங்கள் வாக்கை பதிவு செய்துகொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்து வருகிறது.
தமிழகத்தில் நாளை 38 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலும், 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இதனையொட்டி, தேர்தல் பணிகள் ஜெட் வேகத்தில் நடந்து வருகிறது. வாக்குப் பதிவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச் சாவடிகளில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மறுபுறம் பறக்கும் படையினர் அங்கும், இங்கும் பறந்து சோதனை நடந்தி வருகின்றனர்.

இதற்கிடையில், வாக்குப் பதிவு, நோட்டா, 49 பி உள்ளிட்ட வாய்ப்புகள் குறித்து தேர்தல் ஆணையம் தொடர்ச்சியாக விளம்பரம் செய்து வருகிறது. அந்த வகையில், அன்மையில், விஜய் நடிப்பில் வெளிவந்த சர்கார் படத்தின் மூலம், '49 பி'என்ற சட்டவாய்ப்பு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது.
வாக்காளர்களின் வாக்கை யாரேனும் கள்ள ஓட்டாக பதிவு செய்திருந்தால், நாம் மீண்டும் முறையிட்டு நம் வாக்கை பதிவு செய்துகொள்ளலாம். அதற்கான உரிமையை அளிப்பதுதான் '49 பி' பிரிவு. இந்தமுறை, தேர்தல் ஆணையம் '49 பி' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மேலும், எவ்வாறு, அந்த வாய்ப்பை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.
#49P
— TN Elections CEO (@TNelectionsCEO) April 13, 2019
உங்கள் வாக்கை வேறு யாரும் பதிவு செய்திருந்தால், அதனை நீங்கள் தேர்தல் அதிகாரியிடம் தெரிவுபடுத்தி, அவரின் கேள்விகளுக்கு தக்க பதிலளித்து, வாக்குச் சீட்டு மூலம் உங்கள் வாக்கை பதிவு செய்யலாம். அதற்கு முன் படிவம் 17B-யில் உங்கள் பெயரை பதிவிடவும். #MakeYourMarkTN #GoVoteTN #ECI pic.twitter.com/v87XwX6knw
உங்கள் வாக்கை வேறு யாரும் பதிவு செய்திருந்தால், அதனை நீங்கள் தேர்தல் அதிகாரியிடம் தெரிவுபடுத்தி, அவரின் கேள்விகளுக்கு தக்க பதிலளித்து, வாக்குச் சீட்டு மூலம் உங்கள் வாக்கை பதிவு செய்யலாம். அதற்கு முன் படிவம் 17B-யில் உங்கள் பெயரை பதிவிடவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, காமெடி நடிகர் யோகி பாவுவின் பிரபல வசனமான, எனக்கே விபூதி அடிக்க பாத்தல நீ, 49P உங்கள் ஓட்டு; உங்களுக்கே என விளம்பரம்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications