Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் தொடங்கியது ரமலான் நோன்பு.. கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடித்து இஸ்லாமியர்கள் தொழுகை!

Subscribe to Oneindia Tamil

This years Ramadan fasting begins today in tamilnadu
சென்னை: இந்த ஆண்டின் ரமலான் நோன்பு இன்று தொடங்கி உள்ளது.தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி சிறப்பு தொழுகை செய்து வருகின்றனர்.

30 நாள் நோன்பு நிறைவுக்கு பின் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு இன்று முதல் தொடங்கும் என சென்னை தலைமை ஹாஜி நேற்று முன்தினம் அறிவித்தார். இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தலை பிறை தென்பட்டது. இதனை தொடர்ந்து நோன்பு துவங்கலாம் என பள்ளிவாசல்களில் நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. நடப்பு ஆண்டின் ரமலான் நோன்பு இன்று தொடங்கி உள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை செய்து வருகின்றனர்.

சிறப்பு தொழுகையுடன் ரமலான் நோன்பை இஸ்லாமியர்கள் தொடங்கினர். கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி தமிழகத்தின் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையை தொடங்கினார்கள். முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி தொழுகைக்கு வர வேண்டுமென அனைத்து பள்ளிவாசல்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ரமலான் தொழுகை கடந்த ஆண்டு நடைபெறவில்லை. 30 நாள் நோன்பு நிறைவுக்கு பின் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+