ஊரக உள்ளாட்சி... வெற்றிபெற்றவர்கள் நாளை பதவியேற்கின்றனர்
சென்னை: தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் நாளை பதவியேற்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகள் ஊராட்சி, ஒன்றிய, மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வருகின்றன. நாளை காலை 10 மணிக்கு பதவியேற்றுக்கொள்ளும் நிகழ்வு தொடங்குகிறது.
கடந்த 27-ம் தேதி மற்றும் 30-ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் கடந்த வியாழக்கிழமை அன்று வெளியிடப்பட்டது.

தேர்தல்
கிராம வார்டு உறுப்பினர், கிராம பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆகிய 4 பதவியிடங்களுக்கு வாக்குச்சீட்டு மூலம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதன் முடிவுகளும் முழுமையாக வெளியிடப்பட்டு விட்டதால் பதவியேர்பு வைபங்கள் நாளை நடக்க உள்ளன.

காலை 10
வெற்றி பெற்ற பிரதிநிதிகள் நாளை காலை 10 மணிக்கு பதவி ஏற்கின்றனர். ஊராட்சி அலுவலகம், ஒன்றியம் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பதவியேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஊராட்சி உறுப்பினர், தலைவர் ஊராட்சி அலுவலகங்களிலும், ஒன்றிய கவுன்சிலர்கள் ஒன்றிய அலுவலத்திலும், மாவட்ட கவுன்சிலர்கள் ஆட்சியர் அலுவலகங்களிலும் பதவியேற்கின்றனர்.

11-ம் தேதி
இதனிடையே ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத் தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவியிடங்களுக்கு வரும் 11-ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. மறைமுகத் தேர்தலில் வெற்றிபெற இப்போதே ஆட்களை இழுக்கும் பணி துவங்கியுள்ளது.

தலைவலி
இதுவரை எதிர் எதிர் துருவங்களுக்கு மத்தியில் நடைபெற்ற போட்டி இப்போது உள்போட்டியாக மாறியுள்ளதால் வெற்றி பெற்ற கட்சிகளின் மாவட்டச் செயலாளர்களுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. யாரை ஆதரிப்பது, யாரை விடுவது என்பது தெரியாமல் அவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications