காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி!
சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழாவில் இன்று தங்கக் கருட வாகனத்தில் வெண் பச்சை பட்டுடுத்திக் காட்சியளித்தார் வரதராஜ பெருமாள். ஏராளமான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கண்டு களித்தனர்.
உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில், வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 28 ஆம் தேதி அதிகாலை வெகு விமரிசையாகத் தொடங்கியது. காலை 5 மணி அளவில், கோவிலின் மூலவர் சன்னதியிலிருந்து உற்சவர் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் கொடி மரத்திற்கு எழுந்தருளினார். அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'கோவிந்தா, கோவிந்தா' என முழக்கமிட, பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கருட முகம் பொறித்த பிரம்மோற்சவக் கொடி ஏற்றப்பட்டது. இதனுடன் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா முறைப்படி தொடங்கியது.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து, அலங்கார மண்டபத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியருடன் கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த பிரம்மோற்சவத்தின் பத்து நாட்களும், காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் வரதராஜ பெருமாள் பல்வேறு வாகனங்களில் காஞ்சிபுரம் நகரின் முக்கிய ராஜ வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்.
இந்த பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளாகக் கருதப்படும் கருட சேவை உற்சவம், மே 30 ஆம் தேதியான இன்று நடைபெற்றது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழாவில் இன்று தங்கக் கருட வாகனத்தில் வெண் பச்சை பட்டுடுத்திக் காட்சியளித்தார் வரதராஜ பெருமாள்.
சிறப்பு மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட வரதராஜ பெருமாள், ஆழ்வார் மண்டபத்தில் எழுந்தருளி வைக்கப்பட்டு, விசேஷ ஆராதனை, தீபாராதனை மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க, பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார். தங்கக் கருட வாகனத்தில் ஏறிய பெருமாள், கோயில் வளாகத்தை வலம் வந்து கோபுர வாயிலை அடைந்தபோது, ஏராளமான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கண்டு களித்தனர்.
திருத்தேர் உற்சவம் ஜூன் 3 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த ஆன்மீகத் திருவிழா, ஜூன் மாதம் 8-ம் தேதி தீர்த்தவாரியுடன் இனிதே நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறநிலையத்துறையினர் சிறப்பாகச் செய்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications