எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா?
சென்னை: அதிமுகவில் இருந்து விலகி, பலர் தவெகவில் இணைந்து வரும் நிலையில் மேலும் 3 எம்எல்ஏக்கள் இந்த வாரத்தில் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைகிறார்கள் என சொல்லப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், ஆட்சி அமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் மற்றும் கட்சித் தாவல் விவகாரங்கள் காரணமாக, மாநில அரசியலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

த.வெ.க. (தமிழக வெற்றிக் கழகம்) பெரும்பான்மையை நிரூபித்து நிலையான ஆட்சியை அமைக்க மேற்கொள்ளும் வியூகங்களும், அதற்குப் போட்டியாக எதிர்க்கட்சிகள் வகுக்கும் உத்திகளும் தினமொரு திருப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன.
கூட்டணி மாற்றம்: த.வெ.க.வுக்குக் கை கொடுத்த கட்சிகள்
தமிழகத்தில் புதிய அரசை அமைக்க 118 சட்டமன்ற உறுப்பினர்களின் (MLAs) ஆதரவு தேவை என்ற நிலையில், த.வெ.க. தனித்து 108 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது. இதனால் பெரும்பான்மைக்கு இன்னும் 10 இடங்கள் தேவைப்பட்ட சூழலில், தி.மு.க. கூட்டணியில் இருந்த கட்சிகளைத் தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் த.வெ.க. தீவிரமாக இறங்கியது.
காங்கிரஸின் திடீர் ஆதரவு: தி.மு.க.வுடனான உடன்பாட்டின் மை காய்வதற்கு முன்பாகவே, அமைச்சர் பதவிகளை இலக்காகக் கொண்டு காங்கிரஸ் கட்சி த.வெ.க.வுக்கு ஆதரவளிக்க முன்வந்ததாக சொல்லப்படுகிறது. இதுவே த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கான முதல் திருப்புமுனையாக அமைந்தது.
இடதுசாரிகள் மற்றும் இதர கட்சிகள்: காங்கிரஸைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் எவ்வித அமைச்சர் பதவிகளையும் கோராமல் த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்தன. இவர்களைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆகிய கட்சிகளும் ஆலோசனைகளுக்குப் பிறகு ஆதரவை உறுதி செய்தன. தி.மு.க. கூட்டணியில் இருந்த சில கட்சிகள், தேர்தலின்போதே ரகசியமாக த.வெ.க-வுக்கு வேலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
அ.தி.மு.க-வில் பெரும் பிளவு: சபாநாயகரின் அதிரடி நகர்வுகள்
சட்டசபைக்குள் 47 சட்டசபை உறுப்பினர்களுடன் நுழைந்த அ.தி.மு.க.வில், கட்சித் தலைமைக்கு எதிராகப் பெரும் உள்நாட்டுப் போர் வெடித்தது. கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறி, சி.வி. சண்முகம் மற்றும் வேலுமணி ஆகியோரின் ஆதரவாளர்களான 25 எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவளிப்பதாகப் பகிரங்கமாக அறிவித்தனர்.
இந்த இக்கட்டான சூழலிலும் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் ஆற்றிய உரை, எதிர்கால நீதிமன்ற வழக்குக்கான முக்கிய ஆதாரப் புள்ளிகளைப் பதிவு செய்யும் நோக்கில் அமைந்திருந்தது.
4 எம்.எல்.ஏ.க்கள் திடீர் ராஜினாமா: இந்த 25 பேர் குழுவில் இருந்த மரகதம் குமாரவேல், சத்யபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய நான்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் திடீரென தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் இந்த ராஜினாமா கடிதங்களை உடனடியாக ஏற்றுக் கொண்டதை அடுத்து, அந்த 4 தொகுதிகளும் காலியானதாக அரசிதழில் அறிவிக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்திற்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிருப்தி குழுவின் எண்ணிக்கை 21 ஆகக் குறைந்துள்ளது. மேலும் 3 எம்.எல்.ஏ-க்கள் வரும் வாரத்தில் ராஜினாமா செய்யக் கூடும் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இ.பி.எஸ்-யிடம் சரணடைந்த 21 எம்.எல்.ஏ-க்கள்
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை பாயலாம் என்ற அச்சத்தில், அதிருப்தி குழுவில் இருந்த 21 எம்.எல்.ஏ.க்களும் அண்மையில் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து சரணடைந்தனர். தங்களை மன்னிக்குமாறு கோரி தனித்தனியாக கடிதங்களையும் வழங்கியுள்ளனர். ஆனால், சி.வி. சண்முகம் மட்டும் மன்னிப்புக் கடிதம் ஏதும் அளிக்கவில்லை.
இருப்பினும், எடப்பாடி பழனிசாமி பேரவை விதிகளின்படி சி.வி. சண்முகம் உள்ளிட்ட 21 பேரையும் மன்னிப்பதற்கான கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளார். இக்கடிதம் தற்போது சபாநாயகரின் பரிசீலனையில் உள்ளது.
சபாநாயகர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்களின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டு பதவியில் நீடிக்க அனுமதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க.வின் சட்ட வியூகம்: அதிமுக சட்டப் பிரிவினர் தற்போது தீவிரமான சட்டப் போராட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே ஆளுநரைச் சந்தித்துக் குதிரை பேரம் தொடர்பாகப் புகார் அளித்துள்ளார்.
துரோகிகளுக்கு முட்டுக்கட்டை: ஏற்கெனவே ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்த 4 பேர் மீது, அவர்கள் ராஜினாமா செய்திருந்தாலும், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் இ.பி.எஸ் வலியுறுத்தியுள்ளார். இந்த நடவடிக்கை அவர்களின் இடைத்தேர்தல் போட்டிக்குத் தடையாக இருக்காது என்றாலும், சட்ட ரீதியான நெருக்குதலைத் தரும்.
நீதிமன்ற வழக்கு: கட்சிக்குத் துரோகம் இழைத்தவர்கள் நிம்மதியாக அரசியல் செய்யக் கூடாது என்பதில் அ.தி.மு.க. உறுதியாக உள்ளது. நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதன் மூலம், அதிருப்தியாளர்களின் தலைக்கு மேல் எப்போதும் ஒரு சட்ட ரீதியான 'தொங்கு வாள்' தொங்கிக் கொண்டே இருக்கச் செய்வதே அ.தி.மு.க.வின் தற்போதைய இறுதி வியூகமாக உள்ளது.
சபாநாயகரின் அடுத்தகட்ட முடிவுகளும், அ.தி.மு.க.வின் நீதிமன்ற நகர்வுகளுமே தமிழகத்தில் அமையவுள்ள புதிய அரசின் ஸ்திரத்தன்மையை நிர்ணயிக்கும் என்பதால், அரசியல் களம் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications