சொன்னபடியே இடியுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை.. ஜில் ஜில் மழையால் மக்கள் ஹேப்பி!
Recommended Video
சென்னை: தமிழகத்தின் பல இடங்களில் இடியுடன் கொட்டித் தீர்க்கும் கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணிநேரத்தில் இடியுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
வானிலை மையம் சொன்னது போலவே இன்று பகல் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடிரென கருமேகங்கள் சூழ்ந்து இடியுடன் கனமழை கொட்டி வருகிறது.
கூடவே பலத்தக்காற்றும் வீசி வருகிறது. திடீரென பெய்துவரும் மழையால் வெப்பம் தணிந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சூறாவளி காற்று.. ஆலங்கட்டி மழை.. கோடை வெயில் போயே போச்சு.. குதுகலிக்கும் பெங்களூர்
இதேபோல் சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை வெளுத்து வருகிறது. அத்தனூர்ப்பட்டி, பேளூர், ஏத்தாப்பூர், தும்பல் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி மின்னலுடன் நல்ல மழை பெய்து வருகிறது.