திண்டிவனம் அருகே அதிமுக வேட்பாளர் மீது போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து திமுகவினர் தாக்கியதாக புகார்
திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அதிமுக பெண் வேட்பாளரை காவல்நிலையத்துக்குள் நுழைந்து திமுகவினர் தாக்கியதாக கூறப்பட்ட புகாரால் பதற்றம் ஏற்பட்டது.
Recommended Video
திண்டிவனம் நகராட்சியில் 13-வது வார்டு வாக்குப் பதிவுக்காக வால்டர்ஸ் கார்டன் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இந்த வார்டில் திமுக வேட்பாளராக பாபு, அதிமுக வேட்பாளராக சுதா போட்டியிட்டனர்.

வாக்குப் பதிவு நடைபெற்ற நேரத்தில் பாபு, சுதா இருவருமே வாக்கு சேகரித்தனர். இதனால் திமுக, அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி சுதாவை திமுக வேட்பாளர் பாபு தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து சுதாவின் கணவர் சரவணன், அவரது மகன் அஷோக் இருவரும் திமுக வேட்பாளர் பாபுவையும் திருப்பி தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருதரப்பையும் போலீசார் சமாதானப்படுத்தினர். இதன் பின்னர் அ.தி.மு.க வேட்பாளர் சுதாவின் கணவர் சரணன், மகன் அஷோக் உள்ளிட்டோர் ரோசனை காவல்நிலையத்தில் தி.மு.க வேட்பாளர் பாபு மீது புகார் அளிக்க சென்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க வேட்பாளர் பாபுவின் தம்பி சுரேஷ் உள்ளிட்டோர் ரோசனை காவல்நிலையத்திற்குள் சென்று சுதா குடும்பத்தினரைத் தாக்கி இருக்கின்றனர். இந்த சம்பவத்தைக் கேள்விபட்ட அதிமுகவினரும் ரோசனை காவல்நிலையம் முன்பாக திரண்டனர். அத்துடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகமும் ரோசனை காவல்நிலையத்துக்கு நேரில் சென்றார். அங்கு திமுக வேட்பாளர் பாபு, அவரது தம்பி சுரேஷ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சி.வி.சண்முகம் வலியுறுத்தினார். இந்த சம்பவங்களால் திண்டிவனத்தில் நேற்று பெரும் பதற்றம் நிலவியது.
-
வேல்முருகனுக்கு ஷாக்! கேபி முனுசாமி முன்னிலையில் அதிமுகவுக்கு ‘டைவ்’ அடித்த தவாகா வேட்பாளர்! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
தவெக கட்சியினருக்கு ஷாக்! கரூர் வழக்கில் கைதாகி ஜாமீனில் இருந்த மாசி பவுன்ராஜ் அதிமுகவில் இணைந்தார்! -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications