திண்டிவனம் அருகே அதிமுக வேட்பாளர் மீது போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து திமுகவினர் தாக்கியதாக புகார்
திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அதிமுக பெண் வேட்பாளரை காவல்நிலையத்துக்குள் நுழைந்து திமுகவினர் தாக்கியதாக கூறப்பட்ட புகாரால் பதற்றம் ஏற்பட்டது.
Recommended Video
திண்டிவனம் நகராட்சியில் 13-வது வார்டு வாக்குப் பதிவுக்காக வால்டர்ஸ் கார்டன் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இந்த வார்டில் திமுக வேட்பாளராக பாபு, அதிமுக வேட்பாளராக சுதா போட்டியிட்டனர்.

வாக்குப் பதிவு நடைபெற்ற நேரத்தில் பாபு, சுதா இருவருமே வாக்கு சேகரித்தனர். இதனால் திமுக, அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி சுதாவை திமுக வேட்பாளர் பாபு தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து சுதாவின் கணவர் சரவணன், அவரது மகன் அஷோக் இருவரும் திமுக வேட்பாளர் பாபுவையும் திருப்பி தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருதரப்பையும் போலீசார் சமாதானப்படுத்தினர். இதன் பின்னர் அ.தி.மு.க வேட்பாளர் சுதாவின் கணவர் சரணன், மகன் அஷோக் உள்ளிட்டோர் ரோசனை காவல்நிலையத்தில் தி.மு.க வேட்பாளர் பாபு மீது புகார் அளிக்க சென்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க வேட்பாளர் பாபுவின் தம்பி சுரேஷ் உள்ளிட்டோர் ரோசனை காவல்நிலையத்திற்குள் சென்று சுதா குடும்பத்தினரைத் தாக்கி இருக்கின்றனர். இந்த சம்பவத்தைக் கேள்விபட்ட அதிமுகவினரும் ரோசனை காவல்நிலையம் முன்பாக திரண்டனர். அத்துடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகமும் ரோசனை காவல்நிலையத்துக்கு நேரில் சென்றார். அங்கு திமுக வேட்பாளர் பாபு, அவரது தம்பி சுரேஷ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சி.வி.சண்முகம் வலியுறுத்தினார். இந்த சம்பவங்களால் திண்டிவனத்தில் நேற்று பெரும் பதற்றம் நிலவியது.
-
தேர்தல் விதி வருவதற்கு.. 20 நிமிடம் முன் சென்னையில் மாஸ் "சம்பவம்".. இது லிஸ்டுலேயே இல்லையே -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
சசிகலாவுக்கு விழுந்த பலத்த அடி.. அஇபுதமமுக ஆரம்பமே இப்படியா? காப்பாற்ற போகும் அந்த "பெரிய கை" யார் -
"தவெக உடன் அதிமுக எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை”.. பட்டென சொன்ன எடப்பாடி பழனிசாமி -
விசித்திரமா இருக்கே.. தமிழ்நாட்டிற்கு தாமதமாக தேர்தல் ஏன்? தேர்தல் ஆணையம் வைத்த பெரிய ‘ட்விஸ்ட்’ -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் LIVE: ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு.. மே 4ம் தேதி ரிசல்ட் -
அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை இடம்? கூட்டணி கட்சிகளுடன் பேச குழு அமைத்த எடப்பாடி -
டெல்டாவில்.. முக்கிய தொகுதியிலேயே அடிவாங்கும் திமுக.. சிக்கலில் பெரிய மீன்! இவருக்கே இந்த நிலைமையா? -
38 நாட்களில் தமிழ்நாட்டில் தேர்தல்.. இந்த விஷயங்களை மறக்காதீங்க! முடிவை தீர்மானிக்க போவதே இதான் -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
முழு கண்ட்ரோல்.. இனி பவர் ஐஏஎஸ்கள் கையில்! இன்று முதல் தேர்தல் விதிகள் அமல்! MCC என்றால் என்ன?












Click it and Unblock the Notifications