திடீர் திருப்பம்: கார் உடைப்பு பின்னணியில் சுபாஷ் பண்ணையார்? பாதுகாப்பு கேட்கும் அனிதா ராதாகிருஷ்ணன்
சென்னை: தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனின் காரை அடித்து உடைத்தது தாங்கள்தான் என்று கூறி சுபாஷ் பண்ணையார் பேசுவதை போல வாட்ஸ்அப்களில் வலம் வரும் வீடியோ தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம், திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பு என்ற கிராமத்தைச் சேர்ந்த செல்வன் என்பவர் சமீபத்தில், கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தட்டார் மடம் காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் ஆகியோருக்கு தொடர்பு இருந்ததாக கூறப்பட்டது.
இந்த படுகொலைக்கு நீதி கேட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான, அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையிலான திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனிதா ராதாகிருஷ்ணன் கார்
இந்த நிலையில் அனிதா ராதாகிருஷ்ணனின் சொந்த ஊரான, உடன்குடி அடுத்த, தண்டுபத்து கிராமத்தில், அவரின் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த காரை மர்ம நபர்கள் அடித்து உடைத்தனர். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

சுபாஷ் பண்ணையார்
இந்த நிலையில் பனங்காட்டு மக்கள் கழகத்தின் தலைவர் சுபாஷ் பண்ணையார், தாங்கள்தான் அனிதா ராதாகிருஷ்ணனின் காரை உடைத்தோம் என்றும், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆளும் கட்சி பின்னணி
இதைத் தொடர்ந்து, மிரட்டல் வீடியோ பேசிய சுபாஷ் பண்ணையார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகளை ஆளுங்கட்சியினர் வளர்ப்பதாக குற்றம்சாட்டினார் அனிதா ராதாகிருஷ்ணன்.

பாதுகாப்பு தேவை
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். அப்போது, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநில மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
-
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
வெள்ளை வெள்ளையாய் மிதந்து வந்து.. திருச்செந்தூர் கடலில் ஷாக்! பதறிப் போன பக்தர்கள்! என்னாச்சு? -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
திருச்செந்தூர் கோவில் சிறப்பு தரிசன டிக்கெட் முறைகேடு .. புகாரில் சிக்கியவர்கள் நிம்மதி












Click it and Unblock the Notifications