திருப்பூர் நகைக் கடை கொள்ளை வழக்கு! குண்டர் சட்டத்தை எதிர்த்து 4 வடமாநில கொள்ளையர்களின் மனு தள்ளுபடி
திருப்பூர் நகைக் கடை கொள்ளை வழக்கில் குண்டர் சட்டத்தை எதிர்த்து 4 வடமாநில கொள்ளையர்கள் தாக்கல் செய்த மனு ஹைகோர்ட்டில் தள்ளுபடி
சென்னை: திருப்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டதை ரத்து செய்யக் கோரி வடமாநில கொள்ளையர்கள் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருப்பூர் யூனியன் மில் சாலையில் உள்ள ஜே.கே ஜுவல்லரி நகை கடையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கடையை உடைத்து 3 கிலோ தங்கம், 28 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.
இது தொடா்பாக கடையின் உரிமையாளர் ஜெயகுமாா் திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கொள்ளை சம்பவம் தொடா்பாக திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் உத்தரவின்பேரில்
3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கொள்ளை
கொள்ளையில் ஈடுபட்ட நபா்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று உறுதிப்படுத்திய காவல்துறையினர், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மஹ்தாப், பத்ருல், திலாகாஸ், முகமது சுப்ஹான் ஆகியோரை மகாராஷ்டிராவில் கைது செய்தது காவல்துறை. பின்னர் அவர்களை நாக்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்காக தமிழ்நாடுக்கு அழைத்து வரப்பட்டனர்.

3 கிலோ தங்கம்
அவர்களிடம் இருந்து கொள்ளை அடித்த 3 கிலோ தங்கம், 28 கிலோ வெள்ளி, 25 லட்ச ரூபாய் ரொக்க பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்திற்கு கீழ் வழக்கு பதிவு செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வட மாநில கொள்ளையர்களான மஹ்தாப் உள்ளிட்ட 4 பேர் அவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனு விசாரணை
இந்த மனு நீதிபதி எம்.சுந்தர் நீதிபதி நிர்மல்குமார் அமரும் முன்பு விசாரணை விசாரணைக் விசாரணைக்கு வந்த போது காவல்துறை சார்பாக ஆஜரான மாநில கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி இவர்கள் மீதான குற்றத்திற்கு அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன.

குண்டர் சட்டம்
இவர்கள் மீது குண்டர் சட்டம் ரத்து செய்தால் இவர்கள் இந்த வழக்கிலிருந்து தப்பிக்க நேரிடும் என்று நீதிமன்றத்தில் வாதங்களை வைத்தார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி வட மாநில கொள்ளையர்களான 4 பேர் மீது போடப்பட்ட குண்டர் திடுப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
-
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல்












Click it and Unblock the Notifications