திருத்தணி தவெக நிர்வாகியின் அலப்பறை.. தனித்து விடப்பட்டதற்கு காரணம் இதுதான்! புலம்பும் நிர்வாகிகள்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் யாருடனும் கூட்டணி வைக்காது, தனித்துதான் நிற்கும் என்று விஜய் கூறியிருந்தார். ஆனால், கட்சியின் வேட்பாளர் பிரச்சாரத்திற்கு போகும்போது கூட யாரும் இல்லாமல் தனித்துதான் போவார், என்பதைதான் 'தனித்து' நிற்கிறோம் என்பதற்கு அர்த்தமா? என்று திருத்தணி தவெக வேட்பாளரை பார்த்து, நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
திருத்தணி தவெக வேட்பாளர், வழக்கறிஞர் சத்திய குமார் தனியாக பிரச்சாரம் செய்திருப்பது சோஷியல் மீடியாக்களில் பரவலாக விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

தவெக வேட்பாளர்கள்
வழக்கறிஞர் சத்திய குமார்தான், திருத்தணி தொகுதியின் தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். பொதுவாக தவெகவில் இரண்டு வகையாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். ஒன்று விஜய் தொண்டர் இயக்கத்திலிருந்து வந்த நிர்வாகிகள், தலைமையிடம் பேசி சீட் வாங்கியிருக்கிறார்கள். நீண்ட நாள் ரசிகர் மன்றத்தில் உழைத்ததால் ரொம்ப ரேராக சீட் கிடைத்திருக்கும். மற்றொரு ரகம், மாற்றுக்கட்சியிலிருந்து வந்த நிர்வாகிகள். இவர்கள் இருவரிடம் ஆட்கள் மற்றும் பண பலம் இருக்கும்.
திருத்தணியில் நடந்தது என்ன?
இது இல்லாமல், சம்பந்தமே இல்லாமல் நிர்வாகிகளை பிடித்து, அங்கு இங்கு பேசி சீட் வாங்கியிருப்பவர்கள் மூன்றாவது ரகம். இவர்களிடம் பணம்/ஆட்கள் பலம் போதிய அளவில் இருக்காது. எனவே, பிரச்சாரம் டல் அடிக்கும். அப்படித்தான் திருத்தணியில் நடந்திருக்கிறது. சத்திய குமார் தனியாக சென்று பிரச்சாரம் செய்திருக்கிறார். தணித்து நிற்போம் என்று விஜய் சொன்னதற்கு அர்த்தம் இதுதானா? என்று ரோட்டில் போவோர் வருவோர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
காரணம் என்ன?
என்னதான் நடக்குது திருத்தணியில்? ஏன் வேட்பாளர் தனித்துவிடப்பட்டிருக்கிறார் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் விளக்கமளித்துள்ளனர். அதாவது "வேட்பாளர் எனில், பிரச்சாரத்திற்கு போகும்போது பிரச்சார வாகனத்தை எடுத்து வர வேண்டும். ஆனால், நம்மாளு அதெல்லாம் எடுத்துவர மாட்டாராம். சரிங்க எப்படிங்க போகுறது என கேட்டால்.. சைக்கிள் எடுத்துவர சொல்கிறார். எத்தனை பேருங்க சைக்கிளில் வர முடியும்? என்று கேட்டால்.. அதிகமா ஆள் வேணாம்.. 13 பேரு இருந்தா போதும்னு சொல்றாரு.
https://tamil.oneindia.com/news/chennai/dad-didnt-speak-to-me-can-bjp-tamilisai-soundararajan-win-chennai-mylapore-remember-kalaignar-k-786831.html
அதிருப்தியில் நிர்வாகிகள்
இங்கு கட்சி கிளை அளவில் பலமாக இருக்கிறது. இதெல்லாம் யாருக்காக செய்திருக்கிறோம்? தேர்தல் வெற்றிக்காகத்தானே! ஆனால், இருந்தும் என்னுடன் யாரும் பிரச்சாரத்திற்கு வர வேண்டாம். நான் வீடியோ போட்டே வாக்குகளை வாங்கிவிடுவேன் என்று கூறியிருக்கிறார். மட்டுமல்லாது எங்களையே அவர் அவதூறாக பேசுகிறார். நாங்கள் கஞ்சா அடித்திருப்பதாக கூறுகிறார். இதெயெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்வது?
எங்களிடையே இது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே நாங்கள் அவருக்கு 100% வேலை செய்ய மாட்டோம்" என்று கூறியிருக்கின்றனர்.
-
பெரம்பூரில் மூடிக் கிடக்கும் விஜய் தேர்தல் அலுவலகம்.. இவ்வளவுதான் தவெக தேர்தல் ஏற்பாடு! -
திருத்தணியில் தவெக வேட்பாளருக்கு வந்த தனிமை கொடுமை.. விஜய் கட்சியில் தெறித்து ஓடும் நிர்வாகிகள்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
தவெக வேட்பாளரின் மச்சான் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.50 லட்சம் பறிமுதல்.. வாக்காளர்களுக்காக பதுக்கலா? -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
கொங்கு மண்டல பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் வீட்டில் தங்கும் விஜய்.. புலம்பும் ஆதவ் அர்ஜுனா! -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான்













Click it and Unblock the Notifications