சமூக வலைதளங்களில் ஆதார் எண்? சென்னை ஹைகோர்ட் வழக்கில் இணைந்த மஹூவா மொய்த்ரா எம்.பி.
சென்னை: சமூக வலைதளங்களில் பதிவிடுவோரை அடையாளப்படுத்தும் வகையில் ஆதார் எண்ணை இணைக்கக் கோரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கில் தம்மையும் ஒருவாதியாக சேர்க்க வேண்டும் என்று மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியான மஹூவா மொய்த்ரா மனுத் தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் தமது முதலாவது உரையின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் மஹூவா மொய்த்ரா. பாசிசம் எப்படி உருவாகும் என்கிற அவரது நாடாளுமன்ற உரையானது பெரும் விவாதத்துக்குரியதானது.

இதனிடையே சமூக வலை தளங்களில் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்கிற வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என ஃபேஸ்புக் நிர்வாகம் வலியுறுத்தி இருக்கிறது.
இவ்வழக்கில் அனைத்து தரப்பும் பதில் மனுத் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மஹூவா மொய்த்ரா எம்.பி. ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், சமூக வலைதளங்களில் ஆதார் எண்ணை இணைப்பது என்பது தனிநபர் உரிமையை பாதிப்பதாக இருக்கிறது. தற்போதைய வழக்கின் போக்கு தனிநபர் உரிமை பாதுகாப்புக்கு எதிராக இருக்கிறது. ஆகையால் இவ்வழக்கில் தம்மையும் ஒருவாதியாக சேர்க்கக் கோரி மனுத் தாக்கல் செய்திருக்கிறார் மொய்த்ரா.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் மேற்கு வங்கத்தின் எம்.பி. மொய்த்ரா மனுத் தாக்கல் செய்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அனுமதியின்றி எடுக்கப்படும் கற்களுக்கு டன் 1க்கு வெறும் ரூ.25 அபராதம் ? கனிமவளத்துறைக்கு நோட்டீஸ் -
பக்ரீத் பண்டிகை: பசு, கன்றுகள் வதைக்கு தடை.. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியதாக தமிழக அரசு விளக்கம் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications