10, 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் எப்போது?
சென்னை: தமிழ்நாட்டில் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. 10ம் வகுப்பு மாணவர்களில் 93.80 சதவிகிதமும், 11ம் வகுப்பில் 92.09 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத் தேர்வு எப்போதும் நடக்கும் என்ற விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் மகேஷ் வெளியிட்டுள்ளார். இதில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் 93.80 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் 92.09 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை மாவட்டம் 98.31 சதவிகித தேர்ச்சியுடன் முதலிடத்தையும், விருதுநகர் மாவட்டம் 97.45 சதவிகித தேர்ச்சியுடன் 2வது இடத்தையும், தூத்துக்குடி மாவட்டம் 96.76 சதவிகித தேர்ச்சியுடன் 3வது இடத்தையும் பிடித்துள்ளது. 11ஆம் வகுப்பை பொறுத்தவரை அரியலூர் மாவட்டம் 97.76 சதவிகிதம் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது.
அதேபோல் ஈரோடு மாவட்டம் 96.97 சதவிகித தேர்ச்சியுடன் 2வது இடத்திலும், விருதுநகர் 96.23 சதவிகித தேர்ச்சியுடன் 3வது இடத்திலும் உள்ளது. இந்த நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தமாக 6.20 சதவிகித மாணவர்களும், 11ஆம் வகுப்பில் 8.81 சதவிகித மாணவர்களும் தோல்வி அடைந்துள்ளனர். இதனால் அவர்களுக்கான துணைத் தேர்வு விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
அதில் 10 மற்றும் 11 ஆகிய வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூலை 4ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துணைத் தேர்வுக்கு மே 22ஆம் தேதி முதல் ஜூன் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்தந்த பள்ளிகளை அணுகி மாணவர்கள் எளிதாக துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
அதேபோல் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மே 19ஆம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கற்றல் கற்பித்தல் இரண்டுக்குமான முடிவுகள் என்பதை மனதில் நிறுத்தி மகிழ்ச்சியோடு தன்னம்பிக்கையோடு தேர்வு முடிவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கோரிக்கை வைத்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications