பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்.. தேர்ச்சி விகிதத்தில் கடைசி 5 இடங்கள் பெற்ற மாவட்டங்கள்.. லிஸ்ட் இதோ
சென்னை: தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்ச்சி விகிதத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது. குறைந்த தேர்ச்சி விகிதம் கொண்ட கடைசி 5 மாவட்டங்கள் விவரம் வருமாறு;-
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கியது. 3 வாரம் நடைபெற்ற இந்த தேர்வுகள் ஏப்ரல் 5-ம் தேதி முடிவு பெற்றது. மொத்தம் 7 லட்சத்து 73 ஆயிரத்துன் 688 பேர் 11ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 3 லட்சத்து 60 ஆயிராத்து 908 மாணவர்கள், 4 லட்சத்து 12 ஆயிரத்து 779 மாணவிகள் ஆவர்.

இந்த தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணியளவில் வெளியானது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.in.gov.in ஆகிய இணையதளத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம். எழுதும் போது கொடுத்த செல்போன் எண்ணிற்கும் மேசேஜ் மூலமாக ரிசல்ட் தெரிவிக்கப்பட்டது.
அதே போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை அலுவலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவ- மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறைந்த தேர்ச்சி விகிதம் கொண்ட கடைசி 5 மாவட்டங்கள் விவரம் வருமாறு:-
1. ராணிப்பேட்டை: 82.58 சதவிகிதம்.
2. மயிலாடுதுறை: 83.70 சதவிகிதம்
3. திருவண்ணாமலை: 84.00 சதவிகிதம்
4. விழுப்புரம்; 84.51 சதவிகிதம்.
5. காரைக்கால்: 81.18 (புதுவை) சதவிகிதம்.












Click it and Unblock the Notifications