மேகதாது அணை: மத்திய அரசு அனுமதிக்க கூடாது- டெல்லி செல்லும் குழு-அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்!
சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி தரக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கட்சி கூட்ட முடிவை டெல்லி சென்று கூட்டாக மத்திய அரசிடம் தெரிவிப்பது என்றும் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்கிறது கர்நாடகா. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அனைத்து கட்சி கூட்டம்
மேகதாதுவில் கர்நாடகா அணையை கட்டிவிட்டால் காவிரி நீர் வரத்து மிகவும் குறைந்துவிடும் என்பது தமிழகத்தின் கவலை. இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
இதனடிப்படையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று தமிழக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது.

13 அரசியல் கட்சி தலைவர்கள்
இக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், அதிமுக, இடதுசாரிகள், பாமக உள்ளிட்ட 13 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்துக்கு வந்த அனைத்து கட்சித் தலைவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பேசினார்.
Recommended Video

அனுமதிக்க கூடாது என தீர்மானம்
இந்த கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி தரக் கூடாது; மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முடிவை டெல்லி சென்று மத்திய அரசிடம் கூட்டாக வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு உள்ளிட்டவற்றில் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளவும் இன்றைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications