தீயாய் எழுந்து நின்றாய்-.வான்போல் வளர்ந்து நிற்கிறாய்- முதல்வராகும் ஸ்டாலினுக்கு வைரமுத்து வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமது ட்விட்டர் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து இன்று வெளியிட்ட வீடியோ பதிவு:

கலைஞர் திருமகனே! கண்ணுக்கு இனியவனே
நிலம் போல் பொறுமை கண்டாய்! நீர் போல் இனிமை கொண்டாய்!
தீயாய் எழுந்து நின்றாய்.. காற்றாய் பயணமுற்றாய்...
அதனால்தான்
வான்போல் வளர்ந்து நிற்கிறாய்
உன்வெற்றி புறவழிப்பட்டது அல்ல... அறவழிப்பட்டது
அதனால்தான் நினைவிடத்தில் நிமிர்ந்து உட்கார்ந்து
கண்ணாடி கழற்றி கண் துடைக்கிறார் கலைஞர்
இனி இனமொழியை மீட்டெடுக்கும் உனது கரம்!
எழுதுகோலில் பாட்டெடுக்கும் எமது குலம்!!
அறத்தின் வெற்றி@mkstalin #DMKwinsTN pic.twitter.com/0Bak5N87rZ
— வைரமுத்து (@Vairamuthu) May 3, 2021
இவ்வாறு வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications