ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் நிரபராதிகள் என நீதிமன்றம் விடுதலை செய்யவில்லை.. சொல்வது அண்ணாமலை
சென்னை: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளிகள் நிரபராதிகள் என நீதிமன்றம் விடுதலை செய்யவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: மரியாதைக்குரிய இந்திய உச்சநீதிமன்றம், அரசியல் சாசனம் 142-வது பிரிவின் கீழ் தமக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய குற்றவாளி பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 6 குற்றவாளிகளையும் பேரறிவாளன் விடுதலையை காரணம் காட்டி விடுதலை செய்துள்ளது.

நிரபராதிகள் அல்ல
பாஜக, நமது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கிறது. உச்சநீதிமன்றம் தமக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்த முடிவு செய்திருப்பதை புரிந்து கொள்கிறது. ஆனால் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள், நிரபராதிகள் என விடுதலை செய்யப்படவில்லை என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துகிறோம்.

பேரறிவாளனை அரவணைத்த ஸ்டாலின்
உச்சநீதிமன்றம், இத்தீர்ப்புகளை வழங்கியதும் காங்கிரஸ் கட்சி காட்டும் பாசாங்குத்தனம் திகைக்க வைக்கிறது. ராஜீவ் கொலை குற்றவாளி பேரறிவாளன் விடுதலையானது முதல்வர் ஸ்டாலின் அவரை கட்டி அணைத்து அன்பை பரிமாறினார். அதனை கண்டிக்க முதுகெலும்பில்லாமல் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தேர்தல் வெற்றி முக்கியமா?
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று 6 பேர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை அரை மனதுடன் கண்டித்தாலும் அவர்களது உண்மையான தலைமையும் அவரது பிள்ளைகளும் கடந்த காலங்களில் கடிதங்கள் வாயிலாக, நேரடி சந்திப்புகள் வாயிலாக குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக சிறையில் இருந்து விடுவிப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவித்திருந்தனர். காங்கிரஸ் காட்சிக்கு தேசிய ஒருமைப்பாட்டை விட தமிழக தேர்தல் வெற்றிகள் முக்கியமாகிவிட்டது.

புகலிடம் கூடாது
தமிழக முதல்வர் ஸ்டாலின், அரசியல் சாசனம் தமக்கு வழங்கிய பொறுப்பையும் நமது தேசத்தின் இளைஞர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடக் கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். தமிழ்நாட்டை, தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள வெளிநாட்டவருக்கு புகலிடம் ஆக்கிவிட வேண்டாம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
ஷாக்கில் அதிமுக! விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அந்த சரவணனா? பாஜக விஐபிகள் போட்ட மெகா ஸ்கெட்ச் -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்?












Click it and Unblock the Notifications