Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜஸ்ட் மிஸ்.. கொஞ்சமும் எதிர்பார்க்கல.. பாஜகவுக்கு ஜெர்க் தந்து லிஸ்ட் வெளியிட்ட அதிமுக.. என்னாகும்?

அதிமுக மீது பாஜகவுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்ளாட்சி தேர்தல் குறித்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே அதிமுக வேட்பாளர் லிஸ்ட்டை அறிவித்தது பாஜகவுக்கு அதிருப்தியை தந்துள்ளதாம்.. இதையடுத்து, உள்ளூர் நிர்வாகிகளுடன் கலந்து பேசி, குறிப்பிட்ட இடங்களில் போட்டியிட இப்போதைக்கு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது..

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதற்காக தமிழக கட்சிகள் தயாராகி கொண்டிருக்கின்றன.. தனித்து போட்டியா? கூட்டணியா? என்ற பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

தலைவர்கள்

தலைவர்கள்

இதில், திமுகவில் மாவட்ட அளவிலேயே பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டதால், மாவட்ட செயலாளர்களுடன் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கூட்டணிக் கட்சி தலைவர்கள், தங்களுக்கு செல்வாக்கான இடங்களை கேட்டு பெற்றனர்.

 பாஜக

பாஜக

அதேபோல, அதிமுக தரப்பில் இடப்பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்துவதற்காக மாஜி அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, செங்கோட்டையன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர்... இந்தக் குழுவினர்தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களை முடிவு செய்தனர்.. இதில், பாஜக சார்பில் பேச்சுவார்த்தை குழுவில் கரு. நாகராஜன், கராத்தே தியாகராஜன், ஜி.கே.எஸ்.செல்வகுமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

 வேட்பாளர் லிஸ்ட்

வேட்பாளர் லிஸ்ட்

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்றுதான் கடைசி என்றபோதிலும், அதிமுக - பாஜக கூட்டணியில் இடங்களை முடிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.. காரணம், அவர்களுக்கு வெற்றிவாய்ப்புள்ள பல இடங்களை பாஜகவுக்கு ஒதுக்குவதற்கு தயக்கம் காட்டியதாக செய்திகள் கசிந்தன.. ஆனால் அதற்குள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் லிஸ்ட்டை அதிமுக வெளியிட்டுவிட்டது..

அதிருப்தி

அதிருப்தி

பேச்சுவார்த்தை முடியும் முன்பே, பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே, வேட்பாளர் லிஸ்ட்டை அதிமுக வெளியிட்டதை கூட்டணி கட்சியினர் எதிர்பார்க்கவில்லை.. இது பாஜகவுக்கு சற்று அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமல்ல, தாங்கள் கேட்ட இடங்களை தராமல், அவர்கள் ஒதுக்கும் இடங்களில் தங்களை போட்டியிடும்படி வற்புறுத்துவதால் பாஜகவினர் மேலும் அதிருப்தி அடைந்து வருவதாக கூறப்படுகிறது...

 நிர்வாகிகள்

நிர்வாகிகள்

பாஜகவுக்கு குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கி வைத்து விட்டே, அதிமுக தன்னுடைய வேட்பாளர் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளதாகவும் தொடர்ந்து பேச போதிய அவகாசமும் இல்லை என்பதால் பாஜக கையை பிசைந்து வருகிறதாம்.. இதனால், வேறு வழியில்லாமல் உள்ளூர் நிர்வாகிகளுடன் கலந்து பேசி, குறிப்பிட்ட இடங்களில் போட்டியிட பாஜக இப்போதைக்கு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது..

 கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

ஆனாலும் கள்ளக்குறிச்சியை பாஜகவினர் விடாமல் கேட்டபோதும், அது தங்களுக்கு சாதகமான வார்டுகள் என்று அதிமுக தரப்பு திட்டவட்டமாக சொல்லிவிட்டதாம்.. அதனால் அங்கு பாஜக தனித்து போட்டியிடுமா என்பது தெரியவில்லை... ஆனால், பாஜக முக்கிய நிர்வாகிகள் உள்ள நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களை பாஜக பெரிதும் நம்பி வருவதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+