புதிய அமைச்சர் ஆகிறார் டிஆர்பி ராஜா.. அமைச்சர் நாசர் பதவி பறிப்பு.. அமைச்சரவையில் அதிரடி மாற்றம்!
சென்னை : தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் நாசர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், இந்த தகவல் இன்று ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சரவை மாற்றம் : தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டுள்ளார். மன்னார்குடி எம்எல்ஏவும், டி.ஆர்.பாலுவின் மகனுமான டிஆர்பி ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 11ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு ஆளுநருக்கு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த டிஆர்பி ராஜா அமைச்சரவையில் சேர்பதற்கான ஒப்புதலை அளுநர் அளித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரின் பதவியேற்பு விழா வரும் மே 11ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை ராஜ்பவனில் உள்ள தர்மார் ஹாலில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாசர் நீக்கம் : மேலும் அமைச்சரவை குழுவில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரை விடுவிக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் பரிந்துரைக்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. டி.ஆர்.பி.ராஜாவுக்கு எந்த துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிடவில்லை. புதிய அமைச்சர் பதவியேற்புக்கு பின்னர் தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்ட புதிய அமைச்சரவை பட்டியல் வெளியாகும் எனத் தெரிகிறது.

டிஆர்பி ராஜா : திமுக பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலுவின் மகனும், மூன்று முறை மன்னார்குடி எம்.எல்.ஏ.வாக இருந்துவரும் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். கடந்த ஆண்டு ஜனவரியில், டி.ஆர்.பி.ராஜா திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், ஏற்கெனவே இரண்டு முறை அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களில் அமைச்சர்களின் துறைகள் மாற்றி வழங்கப்பட்டுள்ளதே தவிர இதுவரை ஒரு அமைச்சர் கூட அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படவில்லை.
ஆனால் தற்போதைய அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சர் நாசர் விடுவிக்கப்படுகிறார். 2 ஆண்டு கால திமுக ஆட்சியில் முதல் நபராக அமைச்சர் பதவியை இழக்கிறார் ஆவடி நாசர். ஆவின் பால் விவகாரம், பல்வேறு சர்ச்சைகள் என நாசர் சிக்கிய நிலையில், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
-
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
திமுக - காங்., கூட்டணியில் புதிய புயல்.. ‘கை' வென்ற 7 தொகுதிகளை கேட்கும் ‘உதயசூரியன்'.. குழப்பம் -
"திமுக இருக்கும் வரை பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் பலிக்காது".. நோன்பு நிகழ்வில் உதயநிதி உறுதி! -
வேல்முருகன் 72 மணி நேர கெடு யாருக்கு லாபம்? தவெக பிளான் B.. திமுகவுக்கு வாழ்வுரிமை கட்சியால் லாஸ்? -
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் LIVE: ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு.. மே 4ம் தேதி ரிசல்ட் -
டெல்டாவில்.. முக்கிய தொகுதியிலேயே அடிவாங்கும் திமுக.. சிக்கலில் பெரிய மீன்! இவருக்கே இந்த நிலைமையா? -
டெல்லியில் அதானி அனுப்பிய அட்வைஸ் தூது.. கவனமாய் கேட்டுக்கொண்ட விஜய்.. இனிதான் பெரிய ட்விஸ்டே -
சீட் நம்பரை குறைக்கும் திமுக.. ஏன் அதிக தொகுதிகள் வேண்டும்? அழுத்தமாக பேசிய கே.பாலகிருஷ்ணன்! -
வேகம் எடுக்கும் திமுக.. வேட்பாளர்கள் யார் யார்.. 17 ஆம் தேதி நேர்காணலை தொடங்குகிறார் ஸ்டாலின் -
உடல் மெலிந்து.. 2 மாதத்திற்கு பின் அறிவாலயம் வந்த துரைமுருகன்! கைதாங்கலாக கூட்டிசென்ற பூச்சி முருகன் -
மகளிர் உரிமை தொகை செக்.. தமிழக தேர்தல் தாமதமாக நடக்க காரணமே இதுதான்? ‘உரிமைத் தொகை’ பாலிடிக்ஸ்?! -
2,000 ரூபாய் 'மெகா' பிளான்.. தகரும் தடை? கோட்டையை நோக்கி திமுகவின் மகளிர் உரிமை தொகை அஸ்திரம்!












Click it and Unblock the Notifications