Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாகிஸ்தானிய டுவிட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு செய்த தமிழக சிபிசிஐடி போலீஸ்.. இதுதான் காரணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி எனும் அடர்ந்த காட்டு பகுதி அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 ராணுவ அதிகாரிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தியா முழுவதும் கடும் சோகத்தை ஏற்படுத்திய இந்த விபத்தில் விமானப்படை கேப்டன் வருண் சிங் மட்டும் படுகாயத்துடன் உயிர் தப்பினார். அவருக்கு பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

TN CBCID police registered case against Pakistani Twitter accounts for spreading rumors about military helicopter crash

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக பலர் வதந்தி, அவதூறு பரப்பி வந்தனர். இது தொடர்பாக தமிழகத்தில் சிலர் கைது செய்யப்பட்டனர். ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது. முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் தொடர்பாக இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தானில் பலர் டுவிட்டரில் பல்வேறு அவதூறு கருத்துக்களை தெரிவித்தனர்.

world conflicts monitoring centre @ worldBreakingN9 மற்றும் Pakistan strategle forum @ forumstrategic ஆகிய பாகிஸ்தானிய டுவிட்டர் கணக்குகளில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து வதந்தி பரவப்பட்டது. பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் தகவல்களை பரப்பிய இந்த டுவிட்டர் கணக்குகளின் மீது தமிழ்நாடு சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ' முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் இராவத் மற்றும் அவருடன் பயணித்தவர்களின் இறப்பு குறித்து ட்விட்டர் கணக்குகளில் (i) World Conflicts Monitoring Centre @ WorldBreakingN9 மற்றும் (ii) Pakistan Strategic Forum @ ForumStrategic தவறான மற்றும் அவதூறு செய்திகளை பரப்பி, பயங்கரவாதத்தை ஊக்குவிக்க வழிவகைச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது தமிழ்நாடு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் சைபர் கிரைம் பிரிவு (CB CID Cyber Crime Wing) வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது' என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+