தமிழக ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு தரக் கூடாது.. பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
சென்னை: தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு தரக் கூடாது என பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் கொரோனா மரணங்களும் அதிகரித்துள்ளன.

அத்துடன் கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் பற்றாக்குறை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் மரணங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ஶ்ரீபெரும்புத்தூர் ஆலையில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும். வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜனை எடுத்துசென்றால் தமிழகத்துக்கு கடும் பற்றாக்குறை ஏற்படும்.
தமிழகத்துக்கான ஆக்சிஜன் தேவையை முதலில் உறுதி செய்ய வேண்டும். தமிழகத்துக்கு 220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் போதும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தவறான கணக்கீடு. தற்போதைய கொரோனா சூழலை கருத்தில்கொண்டால் தமிழகத்துக்கு 310 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications