முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கு: மு.க. ஸ்டாலின் ஏப்ரல் 16-ல் ஆஜராக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் ஏப்ரல் 16 ஆம் தேதி ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் மக்களின் மனநிலை, வாக்கி டாக்கி கொள்முதல் உள்ளிட்டவைக் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்தக்கருத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் ஆகியோருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்ததாகக் கூறி முதல்வர் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை நீதிபதி செல்வகுமார் விசாரித்தார். அப்போது அவர் மு.க.ஸ்டாலினை ஏப்ரல் 16-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை மாற்றிய நீதிபதி, அங்கு ஸ்டாலினை ஆஜராக அவர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications